நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பெண் தூய்மை பணியாளர் ஒருவர் மீது, மருத்துவர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல், நகரக்கோட்டை சாலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், சுமார் பத்து வருட காலமாக பணியாற்றி வரும் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தூய்மை பணியாளர், பணிகளை சரியாக செய்யவில்லை என்று, பலர் புகார் கூறியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில்தான் அது குறித்து, அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ராஜ்குமார் என்பவர் அந்த பெண் தூய்மை பணியாளரிடம் விசாரணை நடத்தி இருக்கிறார். அப்போது, அந்த மருத்துவருக்கு, அந்த பெண் தூய்மை பணியாளர் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட அந்த மருத்துவர், அந்த தூய்மை பணியாளரை சரமாரியாக அடித்து, உதைத்து இருக்கிறார். மேலும், அந்த பெண்ணை, அந்த மருத்துவர் அடித்தது மட்டுமல்லாமல், சரமாரியாக வசைபாடியுள்ளார். இந்த விவகாரம் குறித்த வீடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து, இதை பார்த்த பலர் அந்த மருத்துவர் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.