fbpx

பணம் கொடுக்காததால் காரை தூக்கிச் சென்ற ஓட்டுநர்..!! உறவினர் வீட்டுக்கு வரவழைத்து போட்டுத் தள்ளிய கொடூரம்..!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் தேவராஜ். இவர் சென்னையில் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கொலை வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக நேற்று தேவராஜ், பரமக்குடி வந்துள்ளார்.  நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு எம்ஜிஆர் நகரில் உள்ள தனது நண்பர் கோபியின் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேவராஜ் உறவினரான பன்னீர் என்பவருக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார். பணம் பெற்றுக் கொண்ட பன்னீர் அதை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தியதால், அவரது காரை தேவராஜ் சென்னைக்கு எடுத்துச் சென்றுள்ளார். 

இது குறித்து பன்னீர், தேவராஜிடம் அடிக்கடி காரை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு தேவராஜ் மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் தான் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த தேவராஜை பன்னீரின் உறவினர் முனீஸ்வரி இல்லத்திற்கு வரவழைத்து பேசி உள்ளனர். பேச்சுவார்த்தையில் தகராறு ஏற்பட்டு பன்னீர் அவரது உறவினர் தமிழ், வினித், ஆகியோர் தேவராஜை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பரமக்குடி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கொலையாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

பக்கத்து வீட்டுக்காரருடன் காதல்! மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த கணவன்!

Wed Mar 22 , 2023
திருமணத்தை மீறிய உறவிலிருந்த மனைவியை தனியார் ஊழிய நிறுவனர் படுகொலை செய்துள்ள சம்பவம் பெங்களூருவில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கொல்கத்தாவைச் சார்ந்த சேக் சுகைல் என்பவர் பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் தப்ஸின் பாபியான் என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் பெங்களூருவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சுகைல் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார் […]

You May Like