fbpx

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை… 21,446 வாகனங்களுக்கு அனுமதி…

நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய இன்று நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம். பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்ததில் தற்போது வரை 21,446 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.78 லட்சம் பேர் பயணிக்க உள்ளனர்.

தமிழகத்தில் கோடை காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இப்படி கோடை காலங்களில் அவர்களின் வருகை அதிகமாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு, பயணிகளின் வருகையை முறைப்படுத்த உத்தரவிடப்பட்டது.

அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும், அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து, ‘இ‌-பாஸ்’ பெற்று, அதன் அடிப்படையில் வாகனங்களும் சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால், அவர்கள் பயணிக்கும் வாகனங்கள் இ-பாஸ் பதிவு செய்து பயணிக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் ‘epass.tnega.org’ என்ற இணைய முகவரியில் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம். நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய இன்று நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம். பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்ததில் தற்போது வரை 21,446 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.78 லட்சம் பேர் பயணிக்க உள்ளனர்.

Vignesh

Next Post

பிளஸ் 2 தேர்வில் தோல்வியா?… கவலை வேண்டாம்…! ஒரு போன் செய்தால் போதும்…!!

Tue May 7 , 2024
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகதமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 2023-2024ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த சேவையை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ‘104’ – தொலைபேசி மருத்துவ […]

You May Like