fbpx

”மின்சார சட்டத்திருத்தம் அனைத்துவகை மின்சார மானியங்களையும் அடியோடு நிறுத்த வழிவகுக்கும்” – சீமான்

மாநில உரிமையைப் பறிக்கும் மின்சார சட்டத்திருத்தம் 2022ஐ ஒன்றிய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மின்சார சட்டத் திருத்த வரைவு – 2022ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயல்வது இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசினுடைய எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். மாநில உரிமைகளைப் பறித்து, நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கின்ற மோடி அரசின் தொடர் செயல்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியது. விடுதலை பெற்றது முதல் கடந்த 50 ஆண்டுகளில் நாட்டை ஆண்ட காங்கிரஸ் அரசு மெல்ல மெல்ல செய்த மாநிலங்களின் அதிகாரப் பறிப்பை, 8 ஆண்டு கால மோடி தலைமையிலான பாஜக அரசு மிக வேகமாகச் செய்து வருகின்றது.

”மின்சார சட்டத்திருத்தம் அனைத்துவகை மின்சார மானியங்களையும் அடியோடு நிறுத்த வழிவகுக்கும்” - சீமான்

மாநிலங்களிடம் இருந்த மின்சாரம் மீதான உரிமைகளை 2003ஆம் ஆண்டு அன்றைய பாஜக – திமுக கூட்டணி அரசு ஒன்றிய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பிடம் அளித்தது. இது வழக்கம்போல மாநில உரிமை பறிப்புக்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்த திமுகவின் பச்சைத் துரோகங்களின் மற்றுமொரு பக்கம். தற்போது அந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரத்தைப் புதிய சட்டத்திருத்தம் மூலம் மோடி அரசு அதிகரிப்பதென்பது எஞ்சியுள்ள மின்சாரத்தின் மீதான மாநில அரசுகளின் உரிமைகளையும் பறிக்கும் செயல். புதிய சட்டவரைவின்படி, ஒன்றிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடமே அனைத்து அதிகாரங்களும் இருக்கும். இனி, மின்சார ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம் நினைத்தால் ஒரு மாநிலத்தில் எத்தனை தனியார் மின் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்க முடியும்.

”மின்சார சட்டத்திருத்தம் அனைத்துவகை மின்சார மானியங்களையும் அடியோடு நிறுத்த வழிவகுக்கும்” - சீமான்

இதனால் சொந்தமாக மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்தைக் கொண்டிருக்கும் மாநிலங்களின் மின்வாரிய கட்டமைப்புகள் சேவை அடிப்படையில் செயல்படுவதால், அவைகளால் இலாப நோக்கில் செயல்படும் தனியார் மின் நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்க இயலாமல் பேரிழப்பினைச் சந்தித்து எதிர்காலத்தில் மொத்தமாகத் தனியார் நிறுவனங்களிடமே விற்கும் நிலைக்குத் தள்ளப்படுவதோடு பல்லாயிரக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள் வேலையிழக்கக் கூடிய பேராபத்தும் ஏற்படும். அதுமட்டுமின்றி மானியங்களை ரத்து செய்வதையே முக்கிய இலக்காகக் கொண்டுள்ள இந்த வரைவு திட்டமானது, தனியார் மின் நிறுவனங்களுக்கு அதிகளவில் உரிமம் வழங்குவதன் மூலம் வியாபாரம் ஒன்றையே குறிக்கோளாக அந்நிறுவனங்கள் அனைவருக்கும் ஒரே அளவான மின் கட்டணம் வசூலிக்கும் என்பதால் தற்போது தமிழகத்தில் விவசாயிகளுக்கு, நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், பொதுமக்களுக்கு, தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் குறைந்த விலை மின்சாரம் உள்ளிட்ட அனைத்துவகை மின்சார மானியங்கள் அடியோடு நிறுத்தப்படவும் வழிவகுக்கும்.

”மின்சார சட்டத்திருத்தம் அனைத்துவகை மின்சார மானியங்களையும் அடியோடு நிறுத்த வழிவகுக்கும்” - சீமான்

மின்சார விநியோகத்தைத் தனியாருக்கு விடுவது, உற்பத்தி செலவுக்கு இணையாக மின்கட்டணத்தை உயர்த்துவது, மானியத்தைக் கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணத்தை நிர்ணயிப்பது, மின்கட்டணத்தைத் தன்னிச்சையாக முடிவு செய்வது, மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மாநிலத்தின் அரசினை கலந்தாலோசிக்காமலே மற்ற மாநிலங்களுக்கு வழங்குவது என அனைத்தையும் ஒழுங்குமுறை ஆணையமே முடிவு செய்யும் என்பது போன்ற இவ்வரைவின் விதிகள் முழுக்க முழுக்க மின்சாரத் துறையில் மாநில அரசுகளின் அனைத்து உரிமைகளையும் பறிப்பதேயாகும். எனவே, மாநில அரசுகளின் உரிமையைப் பறித்துக் கூட்டாட்சித் தத்துவத்தைக் கேலி கூத்தாக்கி, அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் வகையிலான மின்சாரச் சட்டத் திருத்த வரைவை ஆளும் பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’உலகளாவிய நிகழ்வுகளை தமிழ்நாட்டில் நடத்த அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும்’..! பாராட்டிய பிரதமருக்கு முதல்வர் வைத்த கோரிக்கை..!

Thu Aug 11 , 2022
44-வது செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியதை பாராட்டிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “விருந்தோம்பல் மற்றும் சுயமரியாதை ஆகியவை தமிழர்களின் பிரிக்க முடியாத குணாதிசயங்கள். செஸ் ஒலிம்பியாட் போன்று உலகளாவிய நிகழ்வுகளை நடத்த எதிர்காலத்தில் தமிழகத்திற்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக தமிழக அரசை […]
பாஜகவுடன் நட்பா..? நட்பில்லையா..? ’முடிவு திமுகவிடம்’ - நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி

You May Like