fbpx

மனைவியை கிண்டல் செய்த 17 வயது கஞ்சா சிறுவன்! தட்டி கேட்ட கணவரை கத்தியால் குத்தி படுகொலை!

மனைவியை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட கணவரை கஞ்சா சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள மணலூர் காலனி பகுதியைச் சார்ந்தவர் விஜயகுமார் வயது 33. இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 12 வயதில் ஒரு மகனும் 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். விஜயகுமார் அங்குள்ள செங்கல் சூலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று விஜயகுமாரின் மனைவி சித்ரா அருகில் இருக்கும் கடைக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக சென்று உள்ளார். அப்போது அதே பகுதியைச் சார்ந்த சிறுவன் கஞ்சா போதையில் இருந்ததாகவும் அவன் சித்ராவை கேலி செய்ததாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக தனது கணவர் விஜயகுமாரிடம் வந்து முறையிட்டுள்ளார் சித்ரா. இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் இது குறித்து அந்த சிறுவனை கண்டித்துள்ளார் மேலும் அந்த சிறுவனின் கழுத்தில் கத்தியால் கீரியதாகவும் கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த தஞ்சா போதையில் இருந்த சிறுவன் தனது வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து விஜயகுமாரை சாரா மாறியாக குத்தியுள்ளான். இதில் படுகாயமடைந்த விஜயகுமார் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இருந்ததாக தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல்துறை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. மேலும் இந்த வழக்கில் அவரை கொலை செய்த இந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு அவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Baskar

Next Post

"தன் குழந்தைகளை தலையிலேயே அடித்து துடிதுடிக்க வெட்டிக்கொன்ற தாய்"! காவல்துறை தீவிர விசாரணை!

Mon Apr 10 , 2023
உத்திரபிரதேச மாநிலத்தில் பெற்ற தாயே தன் பிள்ளையை தலையில் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரபிரதேசம் மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள பீஜாரா கிராமத்தைச் சார்ந்தவர் அஜித் யாதவ் இவரது மனைவி நீது. இந்த தம்பதிக்கு பாரி என்ற மகளும் ஹேப்பி மற்றும் ஹர்திக் என்ற மகன்களும் இருந்தனர். அஜித் யாதவ் ஜம்முவில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய பணிக்காக ஜம்முவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் […]

You May Like