சுதந்திர தினத்துக்கு முன்பாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ஷெசாத் பட்டி என்பவர் சமூக வலைதளங்கள் மூலம் இந்திய இளைஞர்களை தொடர்புகொண்டு, அவர்களை தனது குழுவில் இணைத்து வந்துள்ளார். வெளிநாடுகளில் வசித்து வரும் அவர், சமூக வலைதளங்களில் தன்னை […]

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக உருவான பிரச்சினை கொலையில் முடிந்துள்ளது. தோட்டத்தில் தங்கியிருந்த கூலித் தொழிலாளி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அந்தப் பெண்ணின் உறவினரான 19 வயது இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் ராமச்சந்திரன் (45) என்பவர் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஏற்கெனவே நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள […]

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.. செப்டம்பர் 2023 இல், அவர் ஜனாதிபதியாக இருந்தபோது, ​​பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் தனது மனைவிக்கான விழாவில் கலந்து கொள்ள லண்டனுக்குச் சென்றது குறித்து விசாரிக்கப்பட்ட பின்னர், அவர் காவலில் எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.. மேலும், அவர் கொழும்பு கோட்டை நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.. இதுகுறித்து பேசிய அதிகாரி ஒருவர் “நாங்கள் அவரை கொழும்பு […]

கோவையில் லஞ்சம் வாங்கிய இந்து சமய அற நிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். சூலூரை சேர்ந்த சுரேஷ் என்பவரின் தனியார் கோயில் நிதி பிரச்சனையை தீர்த்து வைக்க அற நிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அதில் ரூ.1.5 லட்சத்தை முதலில் கொடுப்பதாக கூறியுள்ளார். ரசாயணம் தடவிய லஞ்ச பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச […]

வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி பகுதியில், தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த காப்பகத்தில் 30க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கியுள்ளனர். இந்த குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள், தங்களை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக புகார் கூறியதால், காப்பக உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்காப்பகத்திற்கு சமீபத்தில் குழந்தைகள் நல அலுவலர்கள் திடீர் ஆய்வுக்கு வந்தனர்.சிறுமிகளிடம் தனியாகச் சந்தித்து பேசிய போது, அவர்கள் […]