fbpx

சூடு வைத்ததால் சிறுமி உயிரிழப்பு.. பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை.!

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் செங்குளத்துப்பட்டியில் 4 வயது சிறுமி சூடு வைத்து துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதன் பெயரில் புகார் மேற்கொள்ளபட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சிறுமியை வளர்த்த ராஜேஷ் குமார் மற்றும் கீர்த்திகா என்ற தம்பதியிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை பெரும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது .

பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை உட்படுத்த பட்டுள்ளார் என்பதும், அதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது .

இதனையடுத்து ராஜேஷ் குமாரிடம் விசாரணை செய்ததில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் , அவரது மனைவியும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார் எனவும் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து இந்த வழக்கை போக்சோ வழக்காக மாற்றி ராஜேஷ்குமார் மற்றும் கீர்த்திகாவை  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Rupa

Next Post

#கிருஷ்ணகிரி : உல்லாசமாக இருக்க.. இடைஞ்சல் பெற்ற குழந்தையை கொன்ற தாய்..!

Sun Nov 6 , 2022
கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் போடம்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ்(27) என்பவர். இவர் கூலித்தொழிலாளியாக இருக்கிறார். மனைவி ஞானமலர்(21). இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் மகனும், 9 மாத ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்த நிலையில், ஞானமலருக்கும், அதே ஊரை சேர்ந்த விவசாயி தங்கராஜ்க்கும்(28) சில காலங்களாக கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் மாதேஷ், மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். இதனை ஞானமலர், தங்கராஜிடம் கூறிய நிலையில், குழந்தைகள் […]

You May Like