fbpx

உயர்நீதிமன்றம் மூடப்படுகின்றது… ஏன் தெரியுமா? வெளியான ஸ்வாரஸ்யமான தகவல்!!

சென்னை உயர்நீதிமன்றம் இன்று இரவு அனைத்து வாயில்களும் பூட்டப்படுகின்றது. ஏன் என்பதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றக் கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம். பாரம்பரிய கட்டிடமான உயர்நீதிமன்றம் தனது பழைமை மாறாமல் கம்பீரமாக நிற்கின்றது. உயர்நீதிமன்றத்தை ஆங்கிலேயர்கள் கட்டியதால், அதற்கு மரியாதை செய்யும் வகையில் இன்று ஒரு நாள் இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை மூடப்படுகின்றது.

பல ஆண்டுகளாக இந்த சம்பிரதாயம் பின்பற்றப்பட்டு வருகின்றது. எனவே சனிக்கிழமை இரவு (இன்று) 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (நாளை) காலை 8 மணி வரை இந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றது.

இது தொடர்பான அறிவிப்பை உயர்நீதிமன்ற பதிவாளர் பி.ஹரி வெளியிட்டுள்ளார். அதில் நுழைவாயில்கள் அனைத்தும் மூப்பட்டு இருக்கும் போது பொதுமக்கள், வக்கீல்கள் என யாருக்கும் நீதிமன்றத்திற்குள் அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

பழம்பெரும் நடிகை திடீர் மரணம் !!

Sat Nov 19 , 2022
பாலிவுட் நட்சத்திரமாக ஜொலித்துவந்த பழம்பெரும் நடிகை திடீரென மணரம் அடைந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை தபசும் 1940களில் சினிமா துறையில் தனது வாழ்க்கையை தொடங்கினார். பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் கொடுத்தன. தற்போது 78 வயதாகும் தபசும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]

You May Like