திருமணமாகி 6 ஆண்டுகளாக குழந்தை இல்லையென்ற ஆத்திரத்தில் மனைவியின் அந்தரங்க உறுப்பை பிளேடால் கிழித்து சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியடைந்த வைத்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனால், கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், அடிக்கடி கோபித்துக் கொண்டு மனைவி தாய் வீட்டிற்கு செல்வதும் அவரை சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அழைத்து வருவதும் தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் குழந்தை தொடர்பான பிரச்சனை வெடித்துள்ளது. மீட்னும் கோபித்துக் கொண்டு அவரது மனைவி தாய் வீட்டிற்குச் சென்று விட்டார். கடந்த 8 மாதங்களாக அவரது தாய் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனையடுத்து, மீண்டும் மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு ரவீந்திரன் அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி மனைவியுடன் இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொள்ள ரவீந்திரன் முயன்றுள்ளார். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த கணவர் பிளேடால் தாக்கி, அந்தரங்க உறுப்புகளில் காயத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது வலியால் துடித்து கொண்டிருந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ரவீந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.