fbpx

அடேங்கப்பா… அரசு பேருந்தில் இன்று முதல் சுமை பெட்டி வாடகை திட்டம்‌…! இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க போதும்….

அரசு விரைவுப்‌ போக்குவரத்துக்‌ கழக பேருந்துகளின்‌ சுமை பெட்டி வாடகை திட்டம்‌ இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

அரசு போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ வருவாயை பெருக்கும்‌ நோக்கத்தோடு பேருந்துகளில்‌ உள்ள உபயோகப்படுத்தப்‌ படாத சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை, கடந்த 05.05.2022 அன்று போக்குவரத்து துறை மானியக்‌ கோரிக்கையின்‌ போது சட்டசபையில்‌ அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு விரைவு போக்குவரத்து கழகமானது தமிழகம்‌ முழுவதும்‌ குறைந்த இடைவெளியில்‌ குறுகிய நேரத்தில்‌ பேருந்துகளை இயக்குகிறது. தமிழகத்தின்‌ ஒவ்வொரு பகுதியிலும்‌ விளைவிக்கும்‌ அல்லது உற்பத்தி செய்யும்‌ பிரசித்தி பெற்ற பொருட்கள்‌ (உதாரணமாக திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணை, தூத்துக்குடி மக்ரூன்‌, கோவில்பட்டி கடலை மிட்டாய்‌, திண்டுக்கல்‌ சிறு வாழை, நாகர்கோயில்‌ நேந்திரம்‌ சிப்ஸ்‌ உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களும்‌) பிற ஊர்களுக்கு வியாபாரம்‌ செய்திட ஏதுவாக தற்போது லாரி மற்றும்‌ பார்சல்‌ சர்வீஸ்கள்‌ மூலம்‌ எடுத்துச்‌ செல்லப்படுகிறது.

இந்நிலையில்‌, குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில்‌ விரைவாக அனுப்பிட ஏதுவாக, பொதுமக்கள்‌, விவசாயிகள்‌, வணிகர்கள்‌ மற்றும்‌ அவர்‌ தம்‌ முகவர்கள்‌ தினசரி பொருட்களை ஒரு ஊர்களுக்கு இடையே அனுப்பி விடும்‌ வகையில்‌, ஒரு மாதம்‌ முழுவதும்‌ பேருந்தில்‌ உள்ள சுமை பெட்டியை மாத வாடகை அல்லது தினசரி வாடகை செலுத்தி உபயோகித்துக்‌ கொள்ள இத்திட்டம்‌ இன்று முதல்‌ செயல்படுத்தப்பட உள்ளது. இதனை, சிறு, பெரு வியாபாரிகள்‌, வணிகர்கள்‌, முகவர்கள்‌ மற்றும்‌ பொது மக்கள்‌ இந்த சேவையினை பயன்படுத்திக்கொள்ள அருகிலுள்ள தமிழ்நாடு அரசு விரைவுப்‌ போக்குகரத்து கழக கிளை மேலாளரிடம்‌ விண்ணப்பிக்கவும்‌.

பொது மக்கள்‌ திருச்சி, மதுரை, சென்னை மார்க்கத்தில்‌ தங்களது சுமைகளை அரசு விரைவுப்‌ போக்குவரத்துக்‌ கழக பேருந்துகளில்‌ அனுப்பிட வசதி செய்யப்பட்டுள்‌ளது. எனவே, இது‌ தொடர்பான ஆலோசனைகளைப்‌ பெற கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்‌.

Vignesh

Next Post

இன்று அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. இந்த மாவட்டங்களுக்கு மட்டும் தான்..

Wed Aug 3 , 2022
ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று 4 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு அல்லது ஆடி 18 என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.. காவிரி ஆறு ஓடும் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், கோவில்களுக்கு சென்றும், நீர்நிலைகளுக்கு சென்றும் வழிபாடு நடத்துவர். பொதுவாக ஆடிப்பெருக்கு நாளில் காவிரி பெருக்கெடுத்து ஓடுவது போல, வாழ்விலும் சந்தோஷம் பெருக வேண்டும் என்பதற்காக காவிரி தாயை மக்கள் […]

You May Like