அரசியல் தலைவரும் திராவிட இயக்க பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நாஞ்சில் சம்பத், 2012 ஆம் வருடம் அதிமுகவில் இணைந்தார்.. அப்போது அவருக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்படது.. மேலும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராகவும் அவர் இருந்து வந்தார்.. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், 2017-ல் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த அவர் , 2019-ல் அவர் திமுகவில் இணைந்தார்.
தற்போது அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார் நாஞ்சில் சம்பத்.. மேலும் திமுக நடத்தும் கூட்டங்களில் கலந்து கொண்டு திராவிட இயக்கம் சார்ந்து பேசி வருகிறார்.. மேலும் திரைப்படங்களில் நடிப்பதுடன், இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கெடுத்து வருகிறார்.. அவ்வப்போவது தனது பேச்சால் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்..
இந்நிலையில் நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.. அவருக்கு என்ன மாதிரியான பிரச்சனை என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.. அவரின் உடல்நிலை குறித்து விரைவில் மருத்துவமனை அறிக்கை வெளியிடும் என்று கூறப்படுகிறது..