fbpx

திடீர் உடல்நலக்குறைவு… தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர் மருத்துவமனையில் அனுமதி..

அரசியல் தலைவரும் திராவிட இயக்க பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நாஞ்சில் சம்பத், 2012 ஆம் வருடம் அதிமுகவில் இணைந்தார்.. அப்போது அவருக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்படது.. மேலும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராகவும் அவர் இருந்து வந்தார்.. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், 2017-ல் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த அவர் , 2019-ல் அவர் திமுகவில் இணைந்தார்.

தற்போது அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார் நாஞ்சில் சம்பத்.. மேலும் திமுக நடத்தும் கூட்டங்களில் கலந்து கொண்டு திராவிட இயக்கம் சார்ந்து பேசி வருகிறார்.. மேலும் திரைப்படங்களில் நடிப்பதுடன், இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கெடுத்து வருகிறார்.. அவ்வப்போவது தனது பேச்சால் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்..

இந்நிலையில் நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.. அவருக்கு என்ன மாதிரியான பிரச்சனை என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.. அவரின் உடல்நிலை குறித்து விரைவில் மருத்துவமனை அறிக்கை வெளியிடும் என்று கூறப்படுகிறது..

Maha

Next Post

ஊதிய உயர்வு..? மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி..!!

Wed Jan 25 , 2023
7ஆவது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 31ஆம் தேதி, மத்திய தொழிலாளர் அமைச்சகம், அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு […]

You May Like