ஓடும் ரயிலில் மாணவிகளிடம் ஆபாச செயலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரளாவில் கோவை – மங்களூர் இன்டர்சிட்டி ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த மாணவிகளிடம் எதிரே அமர்ந்திருந்த நபர், ஆபாச செயலில் செயல்பட்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள், தங்களது செல்போனில் அதனை வீடியோ எடுத்துள்ளனர். பின்னர், அந்த நபரிடம் மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்த நபரை சக பயணிகள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவரது பெயர் ஜார்ஜ் என்பதும் அவர் கன்னூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஓடும் ரயிலில் மாணவிகள் முன்பு ஆபாச செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயணம் செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் அவரது பக்கத்தில் மாணவிகள் இருப்பதை தொடர்ந்து, தகாத செயலில் ஈடுபட்டுள்ளார்.