fbpx

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு…! மீனவர்களுக்கு எச்சரிக்கை இல்லை…!

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,’மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை ஒட்டி, நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று முன்தினம் மாலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது.

இந்நிலையில், நேற்று காலை தெற்கு ஆந்திர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று முதல் 27-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை. வழக்கம் போல கடலுக்கு மீன் பிடிக்க சொல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆசிரியர் தகுதித் தேர்வு..!! இன்றே கடைசி நாள்..!! சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!

Thu Nov 24 , 2022
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வருகின்ற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிபிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம். இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான […]
ஆசிரியர் தகுதித் தேர்வு..!! இன்றே கடைசி நாள்..!! சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!

You May Like