fbpx

Woww…! ஆறு மாதத்திற்கு ஒருமுறை 5,000 ரூபாய் உதவித்தொகை…! இவர்களுக்கு மட்டும் தான்…! முழு விவரம்

நாட்டுப்புறப்பாடல் கலைஞர்கள் உட்பட அனைத்து கலைஞர்களையும் பாதுகாக்க ‘கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கான உதவித்தொகை மற்றும் கௌரவத்தொகை’ பெயரில் கலாச்சாரத் துறை அமைச்சகம் ஒரு திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.

கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கான உதவித்தொகை மற்றும் கௌரவத்தொகை திட்டம் 3 பிரிவுகளைக் கொண்டுள்ளது. பல்வேறு கலாச்சார துறைகளிலும், இளைய கலைஞர்களுக்கு உதவித்தொகை விருது, பல்வேறு கலாச்சாரத் துறைகளில், சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மூத்த மற்றும் இளையோர் கௌரவத்தொகை விருது, கலாச்சார ஆராய்ச்சிக்கான தாகூர் தேசிய கௌரவத்தொகை விருது ஆகியவை இதில் அடங்கும்.

பல்வேறு கலாச்சார துறைகளின் இளைய கலைஞர்களுக்கான உதவித்தொகையாக 18 வயது முதல் 25 வயதுடையவர்களுக்கு 2 வருடங்களுக்கு மாதத்திற்கு 5,000 ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என நான்கு தவணைகளாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது. பல்வேறு கலாச்சாரத் துறைகளில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கான மூத்த கௌரவத்தொகை கலாச்சார ஆராய்ச்சிகளுக்காக 2 வருடங்களுக்கு, மாதம் ரூ.20,000 வீதம் 6 மாதங்களுக்கு ஒரு முறை என நான்கு தவணைகளாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது.

Vignesh

Next Post

இனி சமையலுக்கு கல் உப்பு மட்டுமே பயன்படுத்துங்கள்!... மருத்துவ பயன்களால் ஆரோக்கியம் பெறலாம்!

Tue Mar 28 , 2023
அன்றாட சமையலில் பொடி உப்பிற்கு பதிலாக கல் உப்பை பயன்படுத்தினால் அதிக ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இதன் மருத்துவ பயன்கள் குறித்து பார்க்கலாம். சமையலில் கல் உப்பை சேர்க்கும் பழக்கம் தற்போது மிகவும் குறைந்துவிட்டது. தேவைக்கேற்ப பொடி உப்பையே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றோம். இருப்பினும், இது சாதாரண அல்லது பொடி உப்பைக் காட்டிலும் அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. கடல் அல்லது ஏரியில் இருந்து உப்பு நீர் ஆவியாகி சோடியம் […]

You May Like