fbpx

மருமகளின் தலையை வெட்டி கையில் பிடித்தபடி போலீசில் சரணடைந்த மாமியார்..! திகில் சம்பவத்தின் அதிரவைக்கும் பின்னணி.!

குடும்பப் பிரச்சனை காரணமாக மருமகளின் தலையை வெட்டி எடுத்து வந்து, காவல் நிலையத்தில் சரணடைந்த கோபக்கார மாமியாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கொத்தப்பேட்டை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பம்மா. இவர், தனது மருமகள் வசுந்தரா தலையை வெட்டி எடுத்து வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். தலையுடன் நின்ற சுப்பம்மாவை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரைக் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். அப்போது, மாமியார் சுப்பம்மா, மருமகள் வசுந்தரா இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் வசுந்தராவுக்கு ஆதரவாக அவரது குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்கு வந்து சுப்பம்மாவை தாக்கிச் சென்றதாக கூறப்படுகிறது.

மருமகளின் தலையை வெட்டி கையில் பிடித்தபடி போலீசில் சரணடைந்த மாமியார்..! திகில் சம்பவத்தின் அதிரவைக்கும் பின்னணி.!

இதனால், ஆவேசம் அடைந்த சுப்பம்மா சம்பவத்தன்று மாலை யாரும் இல்லாத நேரத்தில் வசுந்தராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆள் கூட்டி வந்தா அடிக்கிறாய்? என்று ஆவேசமான சுப்பம்மா ஓடிச்சென்று வீட்டிலிருந்த பெரிய அரிவாளை எடுத்து மருமகள் வசுந்தராவின் தலையை, கிடாவை வெட்டுவது போல ஒரே வெட்டாக வெட்டி தனியாக எடுத்துள்ளார். தனக்கு நேர்ந்த அவமானத்துக்கு பழிக்கு பழியாக மருமகளை தீர்த்துக்கட்டிய வெறியுடன், சுப்பம்மா மருமகளின் தலையை கையில் பிடித்தபடி தனது ஏரியாவையே நடுங்க வைக்கும் வகையில் நடந்தே வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கோபக்கார மாமியாரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மருமகளின் தலையை வெட்டி கையில் பிடித்தபடி போலீசில் சரணடைந்த மாமியார்..! திகில் சம்பவத்தின் அதிரவைக்கும் பின்னணி.!

Chella

Next Post

வருடத்திற்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் போதும்.. தினமும் 2.5 ஜிபி டேட்டா.. ஜியோவின் புதிய ஆஃபர்...

Fri Aug 12 , 2022
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவ்வ்போது பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு சுதந்திர தின சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.2,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, 2.5ஜிபி தினசரி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இத்திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும்.. இந்தத் திட்டத்தின் கீழ் வரும் ரூ.3,000 மதிப்புள்ள இலவச பரிசுகள்: 75 ஜிபி கூடுதல் […]

You May Like