எலான் மஸ்க் தனது நிகர சொத்து மதிப்பில் 200 பில்லியன் டாலர்களை இழந்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்று அறியப்பட்ட எலான் மஸ்க், தனது மொத்த சொத்து மதிப்பில் இருந்து சுமார் 200 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. 51 வயதான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கடந்த 2021 நவம்பரில் 340 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்தது. மேலும், இந்த மாத தொடக்கத்தில் லூயிஸ் வுட்டன் தலைமை நிறுவனரான பெர்னார்ட் அர்னால்ட், மஸ்க்கின் சொத்துமதிப்பை விட அதிகம் பெற்று 171 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தார்.
![அடேங்கப்பா..!! 200 பில்லியன் டாலர்களை இழந்த ஒரே நபர்..!! எலான் மஸ்க்கின் புதிய சாதனை..!!](https://1newsnation.com/wp-content/uploads/2020/11/elon-musk-philanthropy.jpg)
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் 4,400 கோடி டாலருக்கு வாங்கினார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக தனது டெஸ்லா நிறுவனத்தின் பெரும் பங்குகளை சந்தையில் விற்பனை செய்தார். இதனால் எலான் மஸ்கிற்கு அவரின் சொத்து மதிப்பில் பெரும்பகுதி குறைந்தது. தற்போது 137 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 200 பில்லியன் டாலர்கள் இழந்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.