fbpx

’அதிமுக அலுவலகத்தில் அசல் பத்திரங்களை வைப்பதே இல்லை’..! ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு புகார்

சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், மாவட்ட செயலாளர், மேலாளர்கள் மீது ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் புகார் அளித்துள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில், அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அசல் பத்திரங்கள் மற்றும் 34 ஆயிரம் ரூபாய் ரொக்கம், மேலும் சில ஆவணங்களை காணவில்லை என புகார் அளித்திருந்தார். கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற வன்முறை போது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதை எடுத்துச் சென்றதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு புகார் கொடுத்திருந்தார்.

’அதிமுக அலுவலகத்தில் அசல் பத்திரங்களை வைப்பதே இல்லை’..! ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு புகார்

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் அதே ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ”அதிமுக தலைமை அலுவலகத்தை சேதம் ஏற்படுத்த தூண்டிய எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தி.நகர் சத்தியா, ஆதிராஜாராம், விருகை வி.என்.ரவி, வேளச்சேரி அசோக் மற்றும் மேலாளர்கள் மகாலிங்கம், மனோகரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்திலேயே அசல் பத்திரங்கள் தலைமை அலுவலகத்தில் வைப்பதில்லை.

மேலும், முத்துராமலிங்க தேவரின் தங்க கவசம், பாதுகாப்பு ஆவணங்கள் எப்போதும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேவரின் வாரிசு இருவரும் இணைந்தே பயன்படுத்துவார்கள். அது எப்போதும் பன்னீர்செல்வத்திடமே இருக்கும். ஆகையால், ஏற்கனவே எங்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரில் உண்மையில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

Chella

Next Post

’கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் சதிக்கும்பலுக்கு துணைபோகும் உளவுத்துறை’..! திருமாவளவன் கண்டனம்

Tue Jul 26 , 2022
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் சதிக்கும்பலுக்கு துணைபோகும் விதமாக உளவுத்துறையின் நடவடிக்கை இருப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் நடந்த வன்முறை தொடர்பாக செய்தி வெளியிட்ட ஆங்கில ஊடகம் ஒன்று, போராட்டத்தின் பின்னணியில் ஆதிதிராவிடர்கள் உள்ளதாக உளவுத்துறை கூறியதாக தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மாணவி கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதிலிருந்து திசை திருப்பி பள்ளியைத் தாக்கியது யார்? கொளுத்தியது […]

You May Like