fbpx

கேட்ட பணத்தை கொடுக்காத பயணி..!! தோட்டத்திற்கு அழைத்துச் சென்று இயற்கைக்கு மாறான வல்லுறவு செய்த ஆட்டோ ஓட்டுநர்..!!

மும்பை அடுத்த காட்கோபரின் புறநகர் பகுதியில் குடிபோதையில் இருந்த ஆண் பயணியுடன் இயற்கைக்கு மாறான வல்லுறவில் ஈடுபட்டதாக 25 வயது ஆட்டோ ஓட்டுநர் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

நடந்தது என்ன..?

கடந்த சனிக்கிழமை இரவு, அதிக குடிபோதையில் இருந்த 31 வயது ஆண் பயணி மும்பையை அடுத்த காட்கோபரில் உள்ள ஆட்டோவில் ஏறியுள்ளார். அப்போது, போதையில் இருந்த அந்த நபர் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லுமாறு ஆட்டோ ஓட்டுநரிடம் கூறியுள்ளார். ஆனால், அது எந்த இடம் மட்டும் குறிப்பிடவில்லை. சரியாக ஒரு மணி நேரத்திற்கு பிறகு பயணி இறுதியாக ஆட்டோவில் இருந்து கீழே இறங்கியுள்ளார். அப்போது, அந்த ஓட்டுநர், பயணித்த செலவானது ரூ.250 ஆகிவிட்டது. அதை தருமாறு கேட்கவே, பயணி வெறும் 100 ரூபாயை மட்டும் கொடுத்துள்ளார்.

இதனால், இருவருக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மிகவும் ஆத்திரமடைந்த ஓட்டுநர், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து அந்த நபரை அருகிலிருந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அவருடன் வலுக்கட்டாயமாக இயற்கைக்கு மாறான வல்லுறவு கொண்டுள்ளார். மேலும், அந்த பயணியிடம் இருந்த ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்து தருமாறு தொல்லை கொடுத்துள்ளார். அதற்கு அந்த பயணி மறுக்கவே, அவரிடம் இருந்த மொபைல் போன் மற்றும் ஏடிஎம் கார்டை எடுத்து சென்றுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் காவல்துறையினரை அணுகி, தன்னை வலுக்கட்டாயமாக இயற்கைக்கு மாறாக அந்த ஓட்டுநர் வல்லுறவு கொண்டதாகவும், தன்னிடம் இருந்த மொபைல் போன் மற்றும் ஏடிஎம் கார்டை புடுங்கி சென்றதாகவும் புகார் அளித்துள்ளார். மேலும், தன்னிடம் இருந்த போனை மட்டுமாவது திரும்பப் பெற்று தருமாறு கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 377 (இயற்கைக்கு மாறான வல்லுறவு), 394 (கொள்ளை செய்வதில் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்து ஓட்டுநரை கைது செய்தனர்.

Chella

Next Post

ஆளுநர் என்ன கட்சிக்காரரா..? செல்லாது செல்லாது..!! கொளுத்திப்போட்ட செல்லூர் ராஜூ..!!

Thu Jun 8 , 2023
ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதி போல பேசி வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.  தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் ஆரம்ப காலத்தில் இருந்தே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. பல்வேறு தருணங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் சூழலில், திமுக அரசின் திராவிட மாடல் கொள்கையை ஆளுநர் ரவி கடுமையாக சாடி இருந்தார். அத்துடன் முதலீடுகளை ஈர்க்க சென்ற முதல்வரின் வெளிநாட்டு பயணத்தையும் […]

You May Like