fbpx

மணல் கொள்ளையை தடுக்க சென்ற போலீஸ்!… டிராக்டர் ஏற்றி கொலை செய்த கொள்ளையர்கள்!… கர்நாடகாவில் கொடூரம்!

கர்நாடகா மாநிலம் கலபுரகி அருகே தலைமை மணல் கொள்ளையை தடுக்க சென்ற காவலர் மயூர் டிராக்டர் ஏற்றி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவ அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு கலபுருகி மாவட்டத்தின், ஜெயவர்கி தாலுகாவிலுள்ள நாராயணபுரா பகுதியில், பீமா நதியில் மணல் கொள்ளை நடப்பதாக, நாராயணபுரா போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தலைமைக் காவலர் மயூர், பிரமோத் ஆகிய இருவரும், தனித்தனி பைக்குகளில் அந்தப் பகுதியில் ரோந்துக்குச் சென்றனர். அப்போது, சட்ட விரோதமாக மணலை அள்ளிச் சென்று கொண்டிருந்த ஒரு டிராக்டரை தடுத்து நிறுத்த முயன்றபோது, அந்த டிராக்டர் டிரைவர், காவல்துறை அதிகாரி எனவும் பாராமல், அவர்மீது வாகனத்தை ஏற்றிக் கொலைசெய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார். மற்றொரு காவல்துறை அதிகாரி தப்பியோடிய சித்தண்ணா என்ற குற்றவாளியைத் துரத்திச் சென்று கைதுசெய்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்திருக்கும் போலீஸார் தலைமறைவாக இருக்கும், மணல் மாஃபியாக்களைத் தேடி வருகின்றனர். மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற காவலரையே, மணல் மாஃபியாக்கள் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Kokila

Next Post

சேலம் மாவட்ட மருத்துவமனைகளில் வேலை!... 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்களுக்கு வாய்ப்பு!... முழுவிவரம் இதோ!

Sat Jun 17 , 2023
சேலம் மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சேலம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணியமர்த்த அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. இந்த ஊழியர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்றும் , நிரந்தர பணியாக மாற்றப்படாது என்றும் அறிவிப்பில் முக்கிய குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல்மருத்துவர் முதல் பொது உதவியாளர், பொது சுகாதார பணியாளர்கள் என பல்வேறு பணிகளுக்கு 8 ஆம் […]
மாதம் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம்..!! தேர்வு கிடையாது..!! உடனே அப்ளை பண்ணிடுங்க..!!

You May Like