fbpx

அந்தரங்க பகுதியை காட்டி இளம்பெண்ணுக்கு ஆசையை தூண்டிய பாதிரியார்..!! பரபரப்பு புகார்..!!

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அடுத்த பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ (29). இவர், குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக இருந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தக்கலை அடுத்த பிலாங்காலை சர்ச் பாதிரியாராக பொறுப்புக்கு வந்திருக்கிறார். இந்நிலையில், பாதிரியார் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன்ஷாட்களும், ஆபாச வீடியோ காலிங் ஸ்கிரீன் ஷாட் காட்சிகளும் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இத்தனை பரபரப்பு நடந்தும் பெண்கள் யாரும் பாதிரியாரின் மீது புகார் அளிக்காததால் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில்தான் பேச்சுப் பாறையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பாதிரியார் மீது புகார் அளித்தார். அதன்பேரில் பெனடிக் ஆன்றோ பேச்சுப்பாறை சர்ச்சில் பாதிரியாராக இருந்தபோது நான் அங்கு பிரார்த்தனைக்காக சென்றேன். அப்போது பாதிரியார் என்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தார். என் உடலை மோசமாக தொட்டு கூச்சப்படுத்தினார். அதன் பின்னர் வாட்ஸ் அப் மூலம் என் ஆசையை தூண்டும் விதமாக மெசேஜ் அனுப்பினார். அவரது அந்தரங்க பகுதியினை போட்டோ எடுத்து அந்த போட்டோக்களை வாட்ஸ் அப்பில் அனுப்பினார் என்று கூறியிருக்கிறார். பேச்சுப்பாறையில் இருந்து பிலாங்காலை சர்ச்சுக்கு மாற்றலாகி சென்ற பின்னரும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பும்படி வற்புறுத்தினார் என்று புகாரில் கூறியிருக்கிறார்.

இந்த புகாரின் பேரில் ஆன்றோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீஸ் சார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண் வன்கொடுமை, பாலியல் உணர்வை தூண்டுவது, சமூக வலைத்தளங்களில் ஆபாச போட்டோக்கள் அனுப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் பாதிரியார் தலைமறைவாக இருக்கிறார். தலைமறைவாக இருக்கும் பாதிரியாரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Chella

Next Post

ஷாக்கிங்..!! கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மாரடைப்பு..!! மத்திய அரசு பரபரப்பு பதில்..!!

Fri Mar 17 , 2023
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் நடந்த இன்றைய கூட்டத்தொடரின் போது மக்களவையில் உறுப்பினர் ராஜூ ரஞ்சன் சிங், கொரோனா காலத்திற்குப் பின்னர் திடீரென மாரடைப்பு ஏற்படக்கூடிய நிகழ்வு அதிகரித்துள்ளதா? இதற்கு கொரோனா தடுப்பூசி காரணமா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி […]

You May Like