fbpx

8 மீனவர்கள் கைது… செப்டம்பர் 5-ம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு…!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களை வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து அரசுடைமையாக்கி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கை அழித்து வருகிறது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பியதையடுத்து ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 450 விசைப்படகுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மரியசியா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடலுக்குச் சென்றகிங்சன், மெக்கன்ஸ், ராஜ் ,இன்னாசி ராஜா, சசி, மாரியப்பன், அடிமை, முனியராஜ் ஆகியோர் நேற்று அதிகாலை நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினர், படகையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபீக், மீனவர்களை வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்குமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து, மீனவர்கள் 8 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப் பட்டனர்.

English Summary

The Sri Lankan court ordered the 8 fishermen arrested by the Sri Lankan Navy to be remanded in judicial custody till September 5.

Vignesh

Next Post

இலவச தொழிற் பயிற்சி + ரூ.750 கல்வி உதவித்தொகை...! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு...!

Wed Aug 28 , 2024
Vocational training plus Rs.750 education stipend

You May Like