fbpx

மூதாட்டியிடம் முத்தம் கேட்டு சண்டையிட்ட வாலிபர்… ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன பாட்டி..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் இருக்கும் மோரூர் பகுதியில் வசித்து வருபவர் மாதையன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடித்துவிட்டு வந்து போதையில், அதே பகுதியில் உள்ள சாந்தா என்ற பாட்டியிடம் முத்தம் கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி, மாதையனிடம் சண்டை போட்டுள்ளார்.
பாட்டி முத்தம் கொடுக்காததால் மதுபோதையில் இருந்த மாதையன் அருகே கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து பாட்டியை சரமாரியாக அடித்துள்ளார். இதனால் பாட்டி சத்தம் போட்டு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மாதையனிடமிருந்து காப்பாற்றினர். பின்னர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த தீவட்டிப்பட்டி போலீசார், மாதையனை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் முழு போதையில் இருந்ததால் அப்படி நடந்து கொண்டதாகவும் தன்னை மன்னித்து விடுங்கள் என்று மாதையன் கேட்டுள்ளார். ஆனால், மாதையனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Baskar

Next Post

குழந்தைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு ஆற்றல் குதித்த பெண்.. குழந்தைகள் இறந்த பரிதாபம்...!

Sat Aug 6 , 2022
வாணாபுரம் அருகே இருக்கும் சதாகுப்பம் பகுதியில் வசித்து வருபவர் பரசுராமன் (30). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அமுதா (27). இவர்களது மகன்கள் நிலவரசு (5), குறளரசு (4). மகள் யாஷினி (7 மாதம்). நேற்று மதியம் அமுதா தனது மகன்களான நிலவரசு, குறளரசு மற்றும் 7 மாத கைக்குழந்தையான யாஷினி ஆகிய மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு தென்பெண்ணை ஆற்றின் கரைக்கு வந்துள்ளார். ஆற்றில் […]

You May Like