சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் இருக்கும் மோரூர் பகுதியில் வசித்து வருபவர் மாதையன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடித்துவிட்டு வந்து போதையில், அதே பகுதியில் உள்ள சாந்தா என்ற பாட்டியிடம் முத்தம் கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி, மாதையனிடம் சண்டை போட்டுள்ளார்.
பாட்டி முத்தம் கொடுக்காததால் மதுபோதையில் இருந்த மாதையன் அருகே கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து பாட்டியை சரமாரியாக அடித்துள்ளார். இதனால் பாட்டி சத்தம் போட்டு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மாதையனிடமிருந்து காப்பாற்றினர். பின்னர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த தீவட்டிப்பட்டி போலீசார், மாதையனை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் முழு போதையில் இருந்ததால் அப்படி நடந்து கொண்டதாகவும் தன்னை மன்னித்து விடுங்கள் என்று மாதையன் கேட்டுள்ளார். ஆனால், மாதையனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் மத்திய சிறையில் அடைத்தனர்.