fbpx

மிரட்டும் மர்ம காய்ச்சல்; 2 வயது குழந்தை பலி… நெல்லையில் நடந்த சோகம்…!

தமிழகத்தில் புளூ காய்ச்சல் என்று அழைக்கப்படும் எச்1.என்1. இன்புளூயன்சா காய்ச்சல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வரக்கூடிய மக்கள் அதிகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஏராளமான குழந்தைகள் இந்த காய்ச்சலால் அதிகம் பாதிக்கபட்டு உள்ளனர். நெல்லை மாவட்டம் பத்தமடையில் மர்ம காய்ச்சலால் இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்தமடை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிமுத்துவின் குழந்தை பிரதிக்சாவுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பெற்றோர்கள் குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை பிரதிக்சா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பத்தமடை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Rupa

Next Post

பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த ரிசப்ஷனிஸ்ட் கொலை … பாஜகவின் முன்னணி பிரமுகர் மகன்கள் கைது …

Sat Sep 24 , 2022
உத்தரகண்ட் மாநிலத்தில் பாலியல் தொழிலுக்கு மறுத்த இளம் பெண்ணை தாக்கி கொலை செய்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் ஸ்ரீகேட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கிதா. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புல்கித் என்பவரின் ரிசார்ட்டில் ரிசப்ஷனிஸ்டாக வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேலைக்குச் சென்ற அங்கிதா வீடு திரும்பவில்லை. இது குறித்து போலீசில் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு […]

You May Like