fbpx

படிக்க வந்த மாணவனிடம் நெருக்கம் காட்டிய டியூஷன் டீச்சர்..!! அந்தரங்க ஆடியோவால் சிக்கிக் கொண்டது எப்படி?

அம்பத்தூரில் பிளஸ் 2 மாணவன் தற்கொலை தொடர்பாக, அவரை காதல் வலையில் வீழ்த்திய டியூஷன் டீச்சரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த அம்பத்தூரில் உள்ள உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வரும் ஷர்மிளா, பள்ளி முடிந்து மாலை நேரத்தில் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வருகிறார். இவரிடம் அதேப்பகுதியை சேர்ந்த பல மாணவர்கள் படித்து வருகின்றனர். அதேசமயம், கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவன் கிருஷ்ணகுமாரும், ஷர்மிளாவிடம் டியூஷன் படித்து வந்துள்ளார்.

படிக்க வந்த மாணவனிடம் நெருக்கம் காட்டிய டியூஷன் டீச்சர்..!! அந்தரங்க ஆடியோவால் சிக்கிக் கொண்டது எப்படி?

இந்நிலையில், மாலை நேரத்தில் டியூசன் வரும் மாணவன் கிருஷ்ணகுமாரிடம் நெருங்கி பழகிய ஷர்மிளா அவரை காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். அன்பாக பேசி மாணவனை தன் ஆசை வலையில் சிக்க வைத்த ஷர்மிளாவிடம் மாணவரும் நெருக்கம் காட்டியுள்ளார். இருவரும் சேர்ந்து நிறைய புகைப்படங்களை செல்போனில் எடுத்துள்ளனர். வாட்ஸ் அப் மூலம் தங்களது புகைப்படங்களை பகிர்ந்து தங்களது பழக்கத்தை அதிகரித்துள்ளனர். இப்படி மாணவனுக்கும், டீச்சருக்கும் காதல் நீண்டு கொண்டே போனது.

படிக்க வந்த மாணவனிடம் நெருக்கம் காட்டிய டியூஷன் டீச்சர்..!! அந்தரங்க ஆடியோவால் சிக்கிக் கொண்டது எப்படி?

அதேபோல் மாணவன் டியூஷன் முடித்து வீட்டுக்கு போனாலும், ஷர்மிளா தொடர்ந்து மாணவனை செல்போனில் தொடர்பு கொண்டு மணிக்கணக்கில் பேசி வந்துள்ளார். இந்நிலையில், மாணவன் கிருஷ்ணகுமார் பள்ளி படிப்பை முடித்துள்ளார். இதையடுத்து, ஆசிரியைக்கும், மாணவனுக்குமான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. இதற்கிடையே, ஆசிரியை ஷர்மிளாவுக்கு நிச்சயதார்த்தம் முடிவானதால், மாணவனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். ஆனால் மாணவன் தொடர்ந்து ஷர்மிளாவிடம் பேச வேண்டும், பழக வேண்டும் என்ற இருந்துள்ளார்.

படிக்க வந்த மாணவனிடம் நெருக்கம் காட்டிய டியூஷன் டீச்சர்..!! அந்தரங்க ஆடியோவால் சிக்கிக் கொண்டது எப்படி?

இதையடுத்து, மாணவன் ஷர்மிளாவை நேரில் சந்திக்க முடிவு செய்து, ஆசிரியையின் திருமணம் குறித்து பேசியுள்ளார். அப்போது என்னை காதலித்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்வது நியாயமா என்று மாணவர், சண்டையிட்டுள்ளார். ஆனால், மாணவனிடம் இருந்து விலக வேண்டும் என்பதில் ஷர்மிளா உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது தொடர்பாக அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவன் பயன்படுத்திய செல்போனில் ஆசிரியை ஷர்மிளாவும், மாணவனும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள், அந்தரங்கமாக பேசிய ஆடியோக்கள் உள்ளிட்டவை இருந்தது. இதை மாணவனின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அம்பத்தூர் மகளிர் போலீசார் ஷர்மிளாவிடம் விசாரணை நடத்தினர். ஆசிரியை செல்போனையும் போலீசார் ஆய்வு செய்ததில், மாணவனிடம் கவர்ச்சியாக பேசி காதல் வலையில் அவரை வீழ்த்தியது தெரியவந்தது.

படிக்க வந்த மாணவனிடம் நெருக்கம் காட்டிய டியூஷன் டீச்சர்..!! அந்தரங்க ஆடியோவால் சிக்கிக் கொண்டது எப்படி?

இதையடுத்து வயது குறைவான மாணவனை, தன் ஆசைக்காக தவறான கண்ணோட்டத்தில் பழகிய குற்றத்திற்காக ஆசிரியை ஷர்மிளா மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆசிரியை ஷர்மிளாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவனும், ஆசிரியையும் எந்த மாதிரியான உறவில் இருந்தார்கள் என்பதை கண்டுபிடிக்க ஆசிரியை ஷர்மிளாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனை முடிவில் தான் இருவருக்கு உடல் ரீதியாக உறவு உள்ளதா என்பது தெரியும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Chella

Next Post

பாட்டியை கொலை செய்து உடலை சிமெண்ட் வைத்து மூடிய குடும்பம்..! 6 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி?

Thu Oct 13 , 2022
வீட்டிற்கு கோபி மஞ்சூரியன் வாங்கி வந்தது பிடிக்காமல், திட்டிய பாட்டியை மகள், பேரன் உள்பட 3 பேர் கொலை செய்த சம்பவத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள கேங்கிரி சாட்டிலைட் டவுனில் வசித்து வந்தவர் சசிலேகா (50). இவருக்கு சஞ்சய் வாசுதேவ் ராவ் என்ற 27 வயது மகன் உள்ளார். சசிலேகாவின் கணவர் உயிருடன் இல்லாத நிலையில், சசிலேகாவின் தாயான 70 […]
பாட்டியை கொலை செய்து உடலை சிமெண்ட் வைத்து மூடிய குடும்பம்..! 6 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி?

You May Like