fbpx

தங்கையின் கணவருடன் ஜாலி செய்த மனைவி..!! வீடு கட்ட வந்தவர் சின்ன வீட்டை கட்டி அணைத்ததால் சிக்கல்..!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கூலிப்படை உதவியுடன் மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த விஏகே நகர் பகுதியில் வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வெற்றிவேல் (42). இவரது, மனைவி ரேவதி(32). இவர்களுக்கு, ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி அதிகாலை வீட்டில் வெற்றிவேல் மயங்க நிலையில், இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது, வெற்றிவேலின் மனைவியிடம் விசாரணை நடத்திய போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

தங்கையின் கணவருடன் ஜாலி செய்த மனைவி..!! வீடு கட்ட வந்தவர் சின்ன வீட்டை கட்டி அணைத்ததால் சிக்கல்..!

இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வந்தனர். அதில், கடந்த 2016இல் வெற்றிவேலின் புதுவீடு கட்டும் பணியை அவரது தங்கை கணவர் நாகராஜ் செய்துள்ளார். அப்போது, அவருக்கும் ரேவதிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் அறிந்த வெற்றிவேல், ரேவதியை கண்டித்துள்ளார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நாகராஜூடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்தாண்டு வெற்றிவேல் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று குடும்பத்துடன் வசித்துள்ளார். கடந்த மே மாதம் கள்ளக்காதலை கைவிடும்படி ரேவதியை அடித்துள்ளார். இதனால், கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

தங்கையின் கணவருடன் ஜாலி செய்த மனைவி..!! வீடு கட்ட வந்தவர் சின்ன வீட்டை கட்டி அணைத்ததால் சிக்கல்..!

இதற்கிடையே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய முடிவு செய்தார் ரேவதி. அதன்படி, தான் திருந்திவிட்டதாக கூறி மீண்டும் கணவரின் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்த நிலையில், கள்ளக்காதலன் நாகராஜ், பாஜக பிரமுகர் ராஜேஷ், ரேவதி ஆகிய 3 பேரும் சேர்ந்து, வெற்றிவேலை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். மறுநாள் கணவர் மயக்க நிலையில், இருப்பதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார் ரேவதி. அவர்கள் மருத்துவமனைக்கு சென்றபோதுதான் விசாரணையில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Chella

Next Post

வாட்ஸ் ஆப் குளோன் செயலியால் ஆபத்து : மக்களின் தனிப்பட்ட குறுந்தகவல்களை உளவு பார்க்கின்றதா ?

Sun Oct 9 , 2022
வாட்ஸ்ஆப் குளோன் செயலியால் ஆபத்து இருப்பதாகவும் தனிப்பட்ட குறுந்தகவல்களை உளவு பார்ப்பதாக அறிக்கை வெளியாகி உள்ளது. வாட்ஸ் ஆப் செயலிகள் 390 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். உடனடி செய்திகளை பெறும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவமான இ.எஸ்.இ.டி., சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு அச்சுறுத்தல் விதிக்கும் வகையில் வாட்சாப் குளோனிங் செயலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்சாப் ஜ.பி. எனப்படும் செயலிகள் வாட்சாப்பின் மக்கள் தகவல்களை […]

You May Like