fbpx

பகீர்.. மது போதையில் வந்த கணவனை தீர்த்து கட்டிய மனைவி..!! கதறி அழுது நாடகம்.. ப்பா என்னா ஆக்டிங்..!!

நாமக்கல் மாவட்டம் காவேட்டிப்பட்டியை சேர்ந்த 37 வயதாகும் முருகேசன் என்பவர் அந்த பகுதியில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஜோதி (31). இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். கடந்த அக்டோபர் 11-ந் தேதி இரவு ஆயுதபூஜை அன்று மதுபோதையில் முருகேசன் வீட்டிற்குள் வந்துள்ளார். மறுநாள் காலையில் வீட்டில் உடல் எரிந்த நிலையில் முருகேசனின் பிணம் கிடந்திருக்கிறார்..

மதுபோதையில் வந்த முருகேசன், பீடி பற்ற வைத்ததாகவும், அதில் ஷோபாவில் பற்றிய தீ, அவரது உடலுக்கு பரவி, அவர் இறந்து விட்டதாகவும் ஜோதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். இது குறித்து நாமக்கல் போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனையில், அவர் கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்டது தெரியவந்தது.

அவரது மனைவி ஜோதி மீது போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது. இதையடுத்து போலீசார் ஜோதியிடம் விசாரணை நடத்தினார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சம்பவத்தன்று வீட்டிற்கு குடிபோதையில் வந்த முருகேசனுக்கும், ஜோதிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஜோதி இரும்பு ராடால் கணவர் முருகேசனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

பின்னர் கொலை சம்பவத்தை மறைப்பதற்காக இறந்த கணவரின் தலை மற்றும் ஷோபாவில் தீக்குச்சியை பற்றவைத்து தீ விபத்து போல் நடித்து நாடகம் ஆடியுள்ளார். இதையடுத்து முருகேசனின் தாயார் அங்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஜோதியை கைது செய்தனர். இந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more ; தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்..!! தீபாவளி செம சர்ப்ரைஸ் காத்திருக்கு..!!

Next Post

இனி வெஸ்டர்ன் டாய்லெட்டை இப்படி பயன்படுத்துங்கள்..!! சில டிப்ஸ் உங்களுக்காக..!!

Mon Oct 14 , 2024
Not everyone needs to know how to use a western toilet.

You May Like