வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த எல்லப்பன்பட்டியை சேர்ந்தவர மணி(21) இவர் டிராக்டர் ஓட்டுநர், இவர் மடிகம் பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவி பள்ளிக்கு பேருந்தில் செல்லும் போது, பொது இடத்தில் வைத்து காதலிக்குமாறு மணி தாக்கியதாக மாணவியின் பெற்றோர் தரப்பில் வேப்பங்குப்பம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, புகாரின் அடிப்படையில் மணியை விசாரிக்க காவல்துறையினர் சென்றபோது அவர் வீட்டில் இல்லை.
மேலும் மணி பள்ளிகொண்டா அடுத்த பள்ளிகுப்பத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற பார்த்தபோது, பாட்டி வீட்டின் அருகில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மணி காவல்துறையின் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.