fbpx

ரத்த வாந்தி எடுத்த இளைஞர்..!! பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி..!! மொத்தம் 56..!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது யஷ்பால் சிங் என்ற நபர் ஜலோர் மாவட்டத்தின் சாஞ்சூர் என்ற இடத்தில் உள்ள டேட்டா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் திடீரென ரத்த வாந்தி எடுத்த நிலையில், அங்கு இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைத்துள்ளனர். அதன்படி, அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் அவரது வயிற்றில் சில உலோகங்கள் இருப்பது தெரியவந்தது. அவருக்கு அடுத்தபடியாக எண்டோஸ்கோபி எடுக்கப்பட்டதில் அவரின் வயிற்றில் நிறைய பிளேடுகள் இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரின் வயிற்றில் இருந்த பிளேடுகள் அகற்றப்பட்டது.

அவரின் வயிற்றில் இருந்து 56 பிளேடுகள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நபர் பிளாஸ்டிக் கவருடன் பிளேடுகளை சாப்பிட்டதால் அதை விழுங்கும்போது காயம் ஏற்படவில்லை என்றும் ஆனால் வயிற்றுக்குள் சென்று அது உள்உறுப்புகளை சேதப்படுத்தியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Chella

Next Post

ஆஸ்திரேலியாவில் ஒரு மன்மதன்! கொரியா பெண்களை குறி வைத்து நாசம் செய்யும் இந்திய வம்சாவளி இளைஞர்!

Thu Mar 16 , 2023
13 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த நபரை ஆஸ்திரேலிய போலீஸ் கைது செய்து இருக்கிறது. தற்போது அவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசித்து வருபவர் பலேஷ் தன்கர். குற்றம் சாட்டப்பட்ட இந்த நபர் சிட்னி ரயில்களுக்கான தரவு காட்சிப்படுத்தல் ஆலோசகராகவும், ஏபிசி மற்றும் ஃபைசர் நிறுவனங்களிலும் பணியாற்றி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிட்னியில் வாழும் இந்திய சமூகத்திடம் நன்கு […]

You May Like