fbpx

மாணவியால் ஊரைவிட்டு ஓடிய இளைஞர்..! 6 வருடங்களுக்கு பிறகு அதே மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரம்..!

பள்ளி மாணவியிடம் வம்பு செய்ததால், ஊரைவிட்டு அடித்து துரத்தப்பட்ட சைக்கோ இளைஞர், 6 வருடங்களுக்குப் பிறகு அதே மாணவியை பலாத்காரம் செய்து கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த செல்லரப்பட்டி ஊராட்சி பகுதியில் வசிக்கும் விவேகானந்தன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றிலிருந்து சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத இளம் பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இதையடுத்து, கந்திலி போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் செல்லரப்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசனின் மகள் சந்தோஷ் பிரியா (22) என்பது தெரியவந்தது. டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காண பயிற்சி மையத்துக்கு சென்ற சந்தோஷ் பிரியா கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி காணாமல் போனதாகவும், தனது மகள், யாரோ ஒரு பையனை காதலித்து வந்த நிலையில், அவனுடன் ஓடிச்சென்று இருக்கலாம் என்று நினைத்து தேடாமல் இருந்துள்ளனர்.

மாணவியால் ஊரைவிட்டு ஓடிய இளைஞர்..! 6 வருடங்களுக்கு பிறகு அதே மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரம்..!

கடந்த 23ஆம் தேதி அன்று கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது சந்தோஷ் பிரியா என்பது தெரியவந்ததும் பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். கண்டெடுக்கப்பட்ட சந்தோஷ் பிரியாவின் செல்போனை வேறு ஒருவர் உபயோகித்து வந்ததை கண்டுபிடித்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், செல்லரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் இந்த செல்போனை தன்னிடம் விற்றதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மகேந்திரன் என்ற 25 வயது இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.

மாணவியால் ஊரைவிட்டு ஓடிய இளைஞர்..! 6 வருடங்களுக்கு பிறகு அதே மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரம்..!

சந்தோஷ் பிரியாவின் வீடும், மகேந்திரனின் வீடும் அருகருகில் உள்ள நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்து வந்த சந்தோஷ் பிரியா, காலையில் குளிப்பதை மறைந்திருந்து பார்த்து விபரீத சேட்டையில் ஈடுபட்ட மகேந்திரனை பிடித்து தர்ம அடி கொடுத்து ஊரைவிட்டே விரட்டி உள்ளனர். கடந்த 6 வருடங்களாக வெளியூரில் தங்கி வேலை செய்து வந்த மகேந்திரன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்து திருப்பத்தூரில் டெலிவரி பாய் வேலைக்கு சேர்ந்துள்ளான். வருடங்கள் கடந்து சந்தோஷ் பிரியா 22 வயது பெண்ணான நிலையிலும் அவள் மீது ஒரு தலை காதல் கொண்ட சைக்கோ போல சுற்றிய மகேந்திரனுக்கு அந்தப்பெண் வேறு ஒரு இளைஞரை காதலிப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சந்தோஷ் பிரியாவை பின் தொடர்ந்த மகேந்திரன், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து வழிமறித்துள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த பிரியா, மகேந்திரனை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதனால் மிருகமாக மாறிய மகேந்திரன் அந்தப்பெண்ணை கடுமையாக தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். பின்னர், மயக்கம் அடைந்த சந்தோஷ் பிரியாவை அங்கேயே விட்டுச்சென்றால் மாட்டி கொள்வோம் என்று பயந்து கை, கால்களை துப்பட்டாவால் கட்டி அருகில் இருந்த கிணற்றில் தூக்கி வீசிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளனர். இதையடுத்து, பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் காமுக சைக்கோ மகேந்திரனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

அடுத்தது என்ன..? ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று முக்கிய ஆலோசனை..

Tue Aug 9 , 2022
கடந்த மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.. இதே போல் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார்.. மேலும் ஓபிஎஸ் இடம் இருந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும் பறிக்கப்பட்டு, அந்த பதவி முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு வழங்கப்பட்டது.. இதை தொடர்ந்து […]
புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார் ஓபிஎஸ்..? அடிமேல் அடி விழுந்ததால் பயங்கர அப்செட்..!!

You May Like