துக்க வீட்டிற்கு குளிர்பதனபெட்டியை எடுத்துச் சென்று சடலத்தை உள்ளே வைத்தபோது மின்சாரம் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் கூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன்(22). இவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் நாகராஜ். நேற்று இவர் உடல் நலக்குறைவால் காலமானார். இதற்காக ஊரே ஒன்றுகூடியிருந்தது. உறவினர்கள் மாலை போன்றவற்றை வாங்கி வந்தனர். உயிரிழந்த வருக்கு ஈமக்கடன்கள் ஒரு பக்கம் நடந்து வந்தன. குளிர்பதன பெட்டிக்கு கூறப்பட்டதை அடுத்து அமரர் ஊர்தி சேவை வழங்குபவர்கள் அதை கொண்டு வந்து இறக்கினார்கள்.
அங்கு நின்று கொண்டிருந்த அய்யப்பன் அவர்களுக்கு உதவி செய்தார். அந்த பெட்டியை எடுத்து கீழே இறக்கி வைத்தார்.பின்னர் இறந்துபோன நபரை எடுத்து பெட்டிக்குள் வைப்பதற்காக மின்சார இணைப்பில் பொருத்திவிட்டு மீண்டும் சென்று பெட்டியை அருகில் இழுத்துள்ளார்.
அப்போது திடீரென மின்சாரம் தாக்கி அந்த நபர் உயிரிழந்தார். முதியவர் உயிரிழப்புக்கு உதவிக்கு வந்த நபர் ஷாக் அடித்துஇறந்து போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடலை கைப்பற்றி கொள்ளிடம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்