நாள்தோறும், நம்முடைய செய்தி நிறுவனத்தில், பல்வேறு வேலை வாய்ப்பு குறித்த செய்திகளை நாம் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றும் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதை பார்த்து, படித்து தெரிந்து கொண்டு வேலையில்லாத பட்டதாரிகள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இன்று தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் சார்பாக வெளியாகி இருக்கின்ற ஒரு வேலை வாய்ப்பு குறித்த செய்தியை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
அதாவது, அந்த நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற project senior research fellow என்ற பணிக்கு 2 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக, கூறப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள், வரும் 19ஆம் தேதிக்கு முன்பாக, விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களின் வயது 35க்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில், MSc தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு 35000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள், நேர்காணல் மூலமாக, தேர்வு செய்யப்படுவார்கள் என்று கருதப்படுகிறது.
நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பினால், முதலில் அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, முறையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, அதிகாரப்பூர்வமான முகவரியில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நேர்காணல் நிகழ்வில் பங்கேற்று கொண்டு பயன்பெறலாம்.
.