fbpx

விவரிக்க வார்த்தைகளே இல்லை ..நன்றி , நன்றி நன்றி… வந்தியத்தேவன் கார்த்தி வெளியிட்ட அறிக்கை

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றியை நோக்கி நகர்வதற்கு வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தான் நடித்தது குறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.   

மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் நேற்று முன்தினம் உலகமெங்கும் ரிலீசானது. மேலும் எங்கு பார்த்தாலும் பொன்னியின்செல்வன் திரைப்படம் குறித்த பேச்சுக்கள் தான் காணப்பட்ட நிலையில் தொடர் விடுமுறையால் டிக்கெட்டுகள் கிடைக்காமல் ரசிகர்கள் தங்கள் குமுறல்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படம் பார்த்த ரசிகர்களும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல படம் மேக்கிங்கில் சூப்பராக வந்துள்ளதாகவும், அனைத்து கேரக்டர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் புத்தகம் படிக்காதவர்களுக்கு கூட கதை புரியும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 பொன்னியின் செல்வம் திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை எட்டியுள்ளதாக நேற்று லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.  அத்துடன் அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் என்ற வீதம் மூன்று நாளுக்கு 30 லட்சம் ரூபாயை பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

இப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தியின் கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. படம் முழுவதும் கார்த்தி மூலம் கதை நகர்வதாக அமைக்கப்பட்டுள்ளதால் முதல் பாகத்தில் கார்த்தியின் பங்கு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் வந்தியத்தேவனாக பயணம் செய்த அனுபவம் தன்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என தெரிவித்து நடிகர் கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அதில் அமரர் கல்கி, இயக்குநர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கலை இயக்குநர் தோட்டா தரணி. எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றி என தெரிவித்துள்ளார். இறுதியாக பொன்னியின் செல்வனை காவியத்தை கொண்டாடும் எனது ரசிகர்கள், சினிமா ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி…நன்றி..நன்றி என கார்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Next Post

’இவர்களுக்குத்தான் எனது முழு ஆதரவு’..!! பொதுக்கூட்டத்தில் தனியரசு பரபரப்பு பேச்சு

Sun Oct 2 , 2022
”ஓபிஎஸ், சசிகலா, தினகரன் மூவரும் பாதிக்கப்பட்டுள்ளதாலும், அவர்கள் இணைந்து செயல்பட விரும்புவதாலும் அவர்களுக்கு ஆதரவளிக்கிறேன் என தனியரசு தெரிவித்துள்ளார். கரூரில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் மாநில பொதுக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழுக்கூட்டத்தில் அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ தனியரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், ”தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஓயாது உழைக்கும் முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் இந்த பொதுக்குழு நன்றி பாராட்டுகிறது. மத்திய […]
’இவர்களுக்குத்தான் எனது முழு ஆதரவு’..!! பொதுக்கூட்டத்தில் தனியரசு பரபரப்பு பேச்சு

You May Like