fbpx

தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. மீனவர்களுக்கும் எச்சரிக்கை..

தமிழகத்தில் வரும் 20-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 18, 19, 20 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.. எனவே வரும் 19,20 ஆகிய தேதிகளில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

தலையில் கல்லை போட்டு ஆட்டோ டிரைவரை கொன்ற பயங்கரம்... போலீசார் விசாரணை...!

Fri Sep 16 , 2022
மதுரை தல்லாகுளம் பகுதியில் இருக்கும் நாராயணபுரம் நாகம்மாள் கோவில் தெருவில் வசிப்பவர் செல்வம். இவருடைய மகன் மணி என்ற வெள்ளை மணி (24). இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இந்நிலையில் நேற்று அதிகாலை செல்லூர் வைகை ஆற்றின் வடகரை பகுதியில் மணி வயிற்றில் கத்திக்குத்து காயங்களுடன், தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது. உடனே செல்லூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான காவல்துறையினர் […]
பைக்கில் சென்ற இளைஞரை சரமாரியாக வெட்டி தலையை மட்டும் எடுத்துச் சென்ற மர்ம கும்பல்..!! அதிரவைக்கும் சம்பவம்..!!

You May Like