fbpx

தனுஷ் பட நாயகி நடிகை ரம்யா காலமானார் என்று பரவும் செய்தியில் உண்மையில்லை..! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

நடிகை ரம்யா, திவ்யா ஸ்பந்தனா என்றும் அழைக்கப்படுவார். நவம்பர் 29, 1982 இல் பிறந்த நடிகை ரம்யாவிற்கு தற்போது 40 வயதாகிறது. கன்னட நடிகையான இவர் தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். மேலும் இவர் கர்நாடக காங்கிரஸில் முக்கியமான தலைவர்களில் ஒருவரும் கூட. இந்நிலையில் நடிகை ரம்யா இன்று மாரடைப்பால் காலமானார் என்று சமூக ஊடங்களில் செய்திகள் பரவின, ஆனால் அதில் உண்மை இல்லை நடிகை ரம்யா நலமுடன் உள்ளார் என்று பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் விளக்கம் அளித்தார். மேலும் நான் நலமுடன் இருக்கிறேன். வதந்தியை நம்பாதீங்க என்று நடிகை திவ்யா ஸ்பந்தனா, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்துள்ளார்.

ஒரு மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) அவரது மரணம் குறித்த தவறான செய்தியைப் பகிர்ந்தபோது தவறான தகவல் தொடங்கியது, இதனால் பலர் நடிகைக்கு இரங்கல் தெரிவிக்கின்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஜெனிவாவில் எடுக்கப்பட்ட ரம்யாவின் புகைப்படத்தை ஒரு பத்திரிகையாளர் பகிர்ந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சரிபார்க்கப்படாத தகவல்களை பரப்பியதற்காக பிஆர்ஓவை ரசிகர்கள் விமர்சித்தனர். நடிகை ரம்யா தற்போது ஜெனிவாவில் நலமுடன் உள்ளார்.

Kathir

Next Post

ICSI நிறுவனம் வெளியிட்ட புதிய வேலை வாய்ப்பு செய்தி….! குறைந்த இடங்களே இருக்கின்றன உடனே விண்ணப்பியுங்கள்….!

Wed Sep 6 , 2023
இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டரிஸ் ஆப் இந்தியா நிறுவனமானது, தற்போது, வேலைவாய்ப்பு தொடர்பான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில், CS trainee பணிக்கான மூன்று காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆர்வமுள்ள நபர்கள், உடனடியாக விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதேபோல, இங்கு பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள், அரசாங்கத்தால், அங்கீகரிக்கப்பட்ட, பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், executive pass பெற்றவர்களாக இருக்க […]

You May Like