நடிகை ரம்யா, திவ்யா ஸ்பந்தனா என்றும் அழைக்கப்படுவார். நவம்பர் 29, 1982 இல் பிறந்த நடிகை ரம்யாவிற்கு தற்போது 40 வயதாகிறது. கன்னட நடிகையான இவர் தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். மேலும் இவர் கர்நாடக காங்கிரஸில் முக்கியமான தலைவர்களில் ஒருவரும் கூட. இந்நிலையில் நடிகை ரம்யா இன்று மாரடைப்பால் காலமானார் என்று சமூக ஊடங்களில் செய்திகள் பரவின, ஆனால் அதில் உண்மை இல்லை நடிகை ரம்யா நலமுடன் உள்ளார் என்று பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் விளக்கம் அளித்தார். மேலும் நான் நலமுடன் இருக்கிறேன். வதந்தியை நம்பாதீங்க என்று நடிகை திவ்யா ஸ்பந்தனா, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்துள்ளார்.
ஒரு மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) அவரது மரணம் குறித்த தவறான செய்தியைப் பகிர்ந்தபோது தவறான தகவல் தொடங்கியது, இதனால் பலர் நடிகைக்கு இரங்கல் தெரிவிக்கின்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஜெனிவாவில் எடுக்கப்பட்ட ரம்யாவின் புகைப்படத்தை ஒரு பத்திரிகையாளர் பகிர்ந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சரிபார்க்கப்படாத தகவல்களை பரப்பியதற்காக பிஆர்ஓவை ரசிகர்கள் விமர்சித்தனர். நடிகை ரம்யா தற்போது ஜெனிவாவில் நலமுடன் உள்ளார்.