fbpx

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை..! இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப்போகுது..! இதில் உங்க மாவட்டமும் இருக்கா..?

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் அடுத்த 3மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தற்போது தெரிவித்து உள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, தேனி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Kathir

Next Post

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

Sat Jul 8 , 2023
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 7ஆம் தேதி நடைபெற்றது. 13 மொழிகளில் நடைபெற்ற இந்த தேர்வை நாடு முழுவதும் 20 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள் இந்த கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதியன்று வெளியானது. இதில் 11,45,976 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். தமிழகத்தில் தேர்வு எழுதியவர்களில் 78,691 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் […]

You May Like