fbpx

இந்த உணவு வகைகள் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்..!

புற்று நோய் பற்றிய அறிந்து கொள்வதன் முன் இயல்பான உள்ள உயிரணுக்கள் எவ்வாறு புற்று நோய் அணுக்களாக மாறுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நம் உடல் பலவகை உயிரணுக்களால் ஆனது உடல் ஆரோக்கியம் இருக்க வேண்டும் அந்த உயிரணுக்கள் வளர்ச்சிப் பெருகி மேலும் பல உயிரினங்களை உருவாக்குகிறது.

இந்த சீரான பணி ஏதேனும் தவறு ஏற்பட்டால் புதிய உயிரணுக்கள் அதிகம் உருவாகிவிடும். பழைய உயிரணுக்கள் கால அளவை மீறி உயிர் வாழ்ந்து விடுகின்றன. அதிகப்படியான உயிர் அணுக்கள் கட்டிகளாக மாறுகிறது. எல்லா கட்டிகளுமே கேன்சர் கட்டிகள் அல்ல. புற்றுநோய் இல்லாத கட்டிகள் உயிருக்கு ஆபத்து இல்லை. பிற கட்டிகளை அறுவை சிகிச்சையின் மூலம் எளிதாக அகற்ற முடிகிறது. அவை உடலில் மற்ற பாகங்களுக்கு பரவுவதுவும் இல்லை.

புற்றுநோய் வர காரணம் புகை இலையை உண்பதாலும் மற்றும் நச்சுத்தன்மை உடைய வேலைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்துக்கு காரணமாக உள்ளது. மேலும் இது பெற்றோர்களிடம் இருந்தும் பரம்பரையாக வரலாம். சில வைரஸ்களாலும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

குரலில் திடீர் மாற்றம், கரகரப்பு, தொண்டையில் அடைப்பு, நாக்கை அசைப்பதில் சிரமம் மற்றும் உடலில் கட்டி தோன்றுதல் இவை அனைத்தும் புற்றுநோய் அறிகுறி ஆகும். புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் வலி ஏற்படுவதில்லை, பரவிய பிறகு வலி ஏற்படும். காரணம் இல்லாமல் எடை குறைவது, பெண்களுக்கு மார்பகங்களில் கட்டிகள், மாதவிடாய் போது அதிக ரத்தப் போக்கு இதன் அறிகுறிகள் ஆகும்.

புற்று நோயை தடுக்க உண்ண வேண்டிய உணவுகள்: பூண்டு, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதோடு புற்றுநோய் உருவாகும் காரணிகளும் அழிக்கப்படுகிறது. சமைக்கும் உணவுகளில் பூண்டுகளை அதிகமாக சேர்த்து வந்தால் குடல் கணையம் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். மஞ்சள் புற்றுநோய் அழிப்பதில் மிக முக்கியமான பொருளாகும். மஞ்சளை ஒரு ஸ்பூன் வெது பெதுப்பான நீரில் குடித்து வந்தால் புற்றுநோய் செல்லின் வளர்ச்சியை தடுக்கிறது.

திராட்சை உண்ணும்போது அதன் விதைகளையும் சேர்த்து உண்ண வேண்டும். திராட்சை விதையில் கேன்சர் செல்லை அழிக்கக்கூடிய வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளது. தினமும் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் புற்று நோயை தடுக்கலாம். தக்காளியில் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் அடங்கியுள்ளது. இது நுரையீரல் புற்றுநோயை தடுக்கக்கூடியது. உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

க்ரீன் டீ அதிகப்படியான புற்று நோயை எதிர்க்கும் பண்புகள் அதிக அளவில் உள்ளது. காளான் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் கேன்சர் நோய் உருவாக காரணமாக இருக்கும் காரணிகளையும் அளிக்கிறது. ஆப்பிள் புற்றுநோய் எதிர்த்துப் போராடும் கெமிக்கல்கள் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். இது போன்ற உணவுகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் புற்று நோய் வராமல் தடுக்கலாம்

Maha

Next Post

இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா… கறிவேப்பிலையின் பயன்கள்..!

Wed Aug 9 , 2023
கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகை இலையாகும். நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும். இந்தக் கறிவேப்பிலை குறுமரம் வகையைச் சேர்ந்தது. கறிவேப்பிலையில் கீழ் காணும் 12 விதமான மருத்துவ பயன்கள் உள்ளன. 1) இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது. 2) வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது. 3) குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு. 4) சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. 5) வேதிச்சிகிச்சையால் […]

You May Like