fbpx

பாபா வங்காவின் இந்த கணிப்புகள் 2022-ல் பலித்துவிட்டது.. இந்தியா பற்றி என்ன கணித்துள்ளார் தெரியுமா..?

பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா இந்தியா குறித்து கணித்த தீர்க்கதரிசனம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

‘ பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்’ என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல்கேரியாவில் பிறந்தவர்.. 12 ஆண்டுகள் சாதாரண வாழ்க்கை வாழ்ந்த அவர், ஒரு மர்மமான புயலின் போது தனது பார்வையை இழந்தார். அதன்பிறகே அவர் தீர்க்க தரிசனங்களை கணிக்க தொடங்கினார்.. இது நிகழ்காலத்தை பார்க்க முடியாத தனக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது கடவுள் கொடுத்த பரிசு என்று அவர் கூறினார்.. எனினும் தனது தீர்க்கதரிசனத்தின் மூலம் அவரது வாழ்க்கையின் 50 ஆண்டுகளில், அவர் சுமார் 100 சம்பவங்களை கணித்தார். அவற்றில் பெரும்பாலானவை உண்மை என நிரூபிக்கப்பட்டன.

பாபா

2022 ஆம் ஆண்டிற்கான அவர் கூறிய அனைத்து கணிப்புகளிலும், இரண்டு உண்மையாகிவிட்டது. 2022 ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் முதல் கணிப்பு, “வெள்ளத்தால்” ஆஸ்திரேலியா பாதிக்கப்படும் என்று உண்மையாகிவிட்டது. அவர் கணித்த படியே இந்த ஆண்டு நாட்டில் பலத்த மழை மற்றும் புயல் தாக்கியது.

2022 ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் இரண்டாவது கணிப்பு என்னவென்றால், பல நாடுகள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும். இந்த ஆண்டு, ஐக்கிய இராச்சியத்தின் பல பகுதிகளிலும் பல ஐரோப்பிய நகரங்களிலும் வறட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. போர்ச்சுகல் மற்றும் இத்தாலி கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் தண்ணீர் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் சைபீரியாவில் ஒரு புதிய வைரஸ் கண்டறியப்படும் என்றும் இறுதியில் அது உலகம் முழுவதும் பரவி மில்லியன் கணக்கானவர்களைக் கொல்லும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார். இந்த கணிப்பு மற்றொரு தொற்றுநோய் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், பாபா வங்கா இந்த ஆண்டு இந்தியாவைப் பற்றிய சில கணிப்புகளையும் செய்துள்ளார். இந்த ஆண்டு உலக வெப்பம் குறையும் என்றும், இதன் காரணமாக வெட்டுக்கிளி திரள்கள் இந்தியாவின் தாவரங்கள் மற்றும் பயிர்களைத் தாக்கி, நாட்டில் கடுமையான உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்றும் அவர் கணித்துள்ளார்..

Maha

Next Post

சிவபெருமானின் இந்த படத்தை வீட்டில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..?

Thu Aug 18 , 2022
சிவபெருமானின் சிலை அல்லது படத்தை தினமும் தரிசிக்க வேண்டும் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.. அதனால்தான், ஒவ்வொரு இந்து வீடுகளிலும் சிவபெருமானின் படம் சிறப்பாக வைக்கப்படுகிறது, இதனால் சிவபெருமானின் அருளையும் புண்ணிய பலனை பெற முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது… ஆனால் வீட்டில் சிவபெருமானின் படத்தை வைக்கும் போது சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் இல்லையெனில் அதுவும் அசகுணப் பலன்களை சந்திக்க நேரிடும். சிவபெருமான் நடனமாடும் படத்தை வீட்டில் […]

You May Like