திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்கரும்பலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 பயின்று வரும் நிலையில், பிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவரின் அறிவுரைப்படி மாத்திரையை உட்கொண்டு வந்துள்ளார், மாத்திரையை உட்கொண்ட பின், அரை மணி நேரத்தில் சிறுமி மயக்க நிலைக்கு சென்று சுயநினைவு இழந்து உறங்கி விடுவார், இந்த நிலையை சாதகமாக பயன்படுத்திய, அவரது சித்தப்பா சுகுமார் என்பவர் பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார், அதுமட்டும் இல்லாமல் சிறுமி சுயநினைவோடு இருந்த போதும் அவ்வப்போதும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார், இதனை அறிந்த அதே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் சிறுமிக்கு செல்போன் மூலம் காதலிப்பதாக நடித்து வலுக்கட்டாயமாக வாழைத்தோப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் வயிற்று வலி ஏற்பட்டதால் சிறுமி தனது தாயிடம் தெரிவித்ததை அடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார், சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள், கடந்த ஜூலை மாதம் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் தனலட்சுமி இடம் புகார் அளித்துள்ளார், அப்போது காவல் நிலையத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர் தனலட்சுமி செயல்பட்டு சிறுமியை மிரட்டி தகுந்த நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து இலவச சட்ட சேவை ஆணையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர், இலவச சட்ட சேவை ஆணையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமியின் கரு கலைக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்துள்ளார், நீதிமன்றம் குற்றவாளியை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தும் குற்றவாளியை கைது செய்யாமல் காவல்துறையினர் அலட்சியம் காட்டி வந்துள்ளனர்.
இதனிடையே சென்னை உயர் நீதிமன்றம் குற்றவாளிக்கு பிடிவாரெண்ட் பிறப்பித்ததன் அடிப்படையில் நேற்று காவல் ஆய்வாளர் தனலட்சுமி குற்றவாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.