fbpx

இது என்னடா நடிகர் பவர் ஸ்டாருக்கு வந்த சோதனை..!! பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடி உத்தரவு..!!

காசோலை மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேவிப்பட்டினம் இறால் பண்ணை அதிபர் முனியசாமிக்கு ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக பவர் ஸ்டார் சீனிவாசன் உறுதி அளித்துள்ளார். பின்னர் கடன் பெற ஆவணச் செலவுக்காக ரூ.14 லட்சம் வேண்டும் என்று முனியசாமியிடம் கேட்டுள்ளார். இதை நம்பிய முனியசாமி ரூ.14 லட்சத்தை பவர் ஸ்டாருக்கு கொடுத்துள்ளார். பின்னர், பவர் ஸ்டார் கடன் வாங்கி தராததால் பணத்தை திருப்பி கேட்டபோது பவர் ஸ்டார் ரூ.14 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், பவர் ஸ்டார் சீனிவாசன் அளித்த ரூ.14 லட்சத்துக்கான காசோலை வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி வந்துள்ளது. இதனால் முனுசாமி கடன் பெற ஆவணச் செலவுக்காக வாங்கிய ரூ.14 லட்சம் பணத்தை தர வேண்டும் என புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நடிகர் பவர் ஸ்டாருக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி நிலவேஸ்வரன் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார்.

Chella

Next Post

வெள்ள நிவாரண நிதி வழங்க விருப்பமா..? வங்கி விவரங்களை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!!

Fri Dec 8 , 2023
‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட பாதிப்பை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட வங்கி விவரங்களை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த […]

You May Like