fbpx

இது 9-வது முறை..!! செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு..!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக 8 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 9ஆவது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

அதன் தொடர்ச்சியாக, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டு மனுவை நாளை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ஏற்கனவே பட்டியலிடப்பட்ட வழக்குகள் இருப்பதால், அவசர வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. உச்சநீதிமன்றத்தில் நவராத்திரி விடுமுறை வர உள்ளதால், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரும் மேல்முறையீட்டு மனு, வருகிற 30ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

நள்ளிரவில் சமந்தாவை அதற்கு அழைத்து மெசேஜ் அனுப்பிய ஜிம் ட்ரெய்னர்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Fri Oct 20 , 2023
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர், சில காரணங்களால் விவாகரத்து செய்தார். தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகிறார், இவருக்கு தற்போது மார்க்கெட் அதிகரித்து கொண்டேபோகிறது. மேலும், இவர் புஷ்பா படத்தில் ஐட்டம் டான்சராக ஆடியது குறித்து […]

You May Like