fbpx

பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜோவிகா வெளியேறியதற்கு முக்கிய காரணமே இதுதானாம்..!! குஷியில் ரசிகர்கள்..!!

இறுதிப் போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோவிகா, இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார். மக்கள் ஆதரவு அவருக்குக் குறைய என்ன காரணம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவராக ஜோவிகா நுழைந்தார். ஆரம்பத்தில் வனிதாவின் மகள் என்ற அடையாளம் அவருக்கு இருந்தாலும் பிக்பாஸ் விளையாட்டை நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டு விளையாடினார். குறிப்பாக, கல்வி குறித்து இவர் முன்வைத்த விவாதங்கள் பார்வையாளர்கள் மத்தியில் பேசுபொருளானது. பிறகு பிரதீப், விசித்ராவுடன் சண்டை போட்டதும் இவருக்கான அட்டென்ஷன் கிடைத்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே பிக்பாஸ் இல்லத்தில் சாப்பிடுவதும், தூங்குவதுமாக இருக்கிறார் ஜோவிகா. பிக்பாஸ் வீட்டில் மன உளைச்சல் இருந்தால் அப்படி தான் தூக்கம் வரும் என வெளியே வனிதாவும் விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால், பிக்பாஸ் வீட்டை பொறுத்தவரை அடிக்கடி தூங்கக் கூடாது என்பது முக்கியமான விதி. ஜோவிகா தூங்கும் போதெல்லாம் பிக்பாஸ் அவரை எழுப்பிவிட்டு டயர்டு ஆகி இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, கேங் தொடர்பான பிரச்சனை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று கொண்டிருந்தபோது, ‘நான் எந்த கேங்கும் இல்லை. என்னை அனுப்பி விடுங்க. நான் என் அம்மா கிட்ட போகணும்’ என ஜோதிகா கதறி அழுதார். அவரது விருப்பப்படியே ரசிகர்கள் குறைந்த வாக்குகளை கொடுத்து அவரை இந்த வாரம் வெளியேற்றி விட்டனர்.

Chella

Next Post

மியாட் மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு..! பதறும் தேமுதிக தொண்டர்கள்..!

Sat Dec 2 , 2023
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சில ஆண்டுகளாக கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இதன் காரணமாக கடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு இருந்த நீரிழிவு பிரச்சனையால், வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அந்த விரல் அகற்றப்பட்டது. இந்நிலையில், கடந்த நவம்பர் 18ஆம் தேதி காய்ச்சல், சளி தொந்தரவு […]

You May Like