fbpx

‘இதுதான் பிரச்சனை’..!! ’காது கொடுத்து கேட்க மாட்டாங்க’..!! ’பாஜகவில் இருந்து பிரிந்தது ஏன்’..? எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!!

தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனையை எடுத்துக் கூறினால், காது கொடுத்து கேட்பதில்லை என்பதால் பாஜக கூட்டணியில் இருந்து தனியாக பிரிந்து வந்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “முதலமைச்சர் ஸ்டாலினின் ஸ்பெயின் பயணம் தொடர்பாக மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது. தமிழக மக்களின் பிரச்சனைகளை யார் சரி செய்வார்களோ, அவர்களுக்கு பிரச்சனையின் அடிப்படையில் ஆதரவு அளிக்கப்படும்.

அதிமுக தலைமையிலான சிறப்பான கூட்டணி அமையும். சென்னையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனையை எடுத்துக் கூறினால், காது கொடுத்து கேட்பதில்லை என்பதால் பாஜக கூட்டணியில் இருந்து தனியாக பிரிந்து வந்துவிட்டோம்” என குற்றம்சாட்டினார்.

Chella

Next Post

பிரதமரின் முத்ரா திட்டம்...! ரூ.10 லட்சம் வரை பிணையம் இல்லாத கடன்...!

Fri Feb 9 , 2024
பிரதமரின் முத்ரா திட்டம் சுய வேலைவாய்ப்பை எளிதாக்குவதற்காக அரசால் தொடங்கப்பட்டது. ரூ.10 லட்சம் வரை பிணையம் இல்லாத கடன்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் 26.01.2024 வரை 46.16 கோடி கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டம் ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கீட்டில், 2021-22 முதல் 5 ஆண்டு காலத்திற்கு அரசால் செயல்படுத்தப்படுகிறது, இது 60 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கும் திறன் கொண்டது. வேலைவாய்ப்பை உருவாக்கும் பிரதமரின் […]

You May Like