நம்முடைய உடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம் கெட்டுப் போவதற்கான காரணம் என்ன என்பதை பற்றி பலர் தெரியாமல் இருந்து வருகின்றனர். நம்முடைய உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான உறுப்பு, சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டுதல் பணியை செய்கின்றன. செரிமான அமைப்பிலிருந்து வெளியேறும் கழிவுகளும் அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுகிறது. ஆனால், இதய நோய்கள், சர்க்கரை நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் போல சிறுநீரக பிரச்சனைகளும் பயங்கரமானவை என்று சொல்லப்படுகிறது. இந்த சிறுநீரகப் பிரச்சனை எப்படி ஏற்படுகின்றன என்பதை நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம்.
சிறுநீரின் நிறம் மாறினால் அல்லது சிறுநீர் அசாதாரணமாக இருந்தால், அது சிறுநீரக பிரச்சனையாக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், கழிவுகளை சுத்தம் செய்யும் செயல் முறையில், பிரச்சனை ஏற்படலாம். இதன் காரணமாக, அந்த கழிவுகள் இரத்தத்தில் கலந்து, வாயின் வழியே துர்நாற்றம் வீசும். சிறுநீரகங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்தால், சுவை மற்றும் பசியின்மை திறன் வெகுவாக குறையும்.
இரத்தத்தில் இருக்கின்ற கழிவுகளின் விளைவு காரணமாக, அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தி உள்ளிட்டவை உண்டாகலாம். சிறுநீரக செயல்பாடு குறைந்து காணப்பட்டால், இரத்த சிவப்பணு உற்பத்தியை பாதித்து, சோர்வு மற்றும் மூளை குறித்த பிரச்சனைகளுக்கு வழிவகை செய்யும். சிறுநீரகம் அமைந்திருக்கின்ற பின் பகுதியில் வலி அதிகமாக இருக்கும். இது சிறுநீரக செயலிழப்புக்கான பொதுவான அறிகுறி என்று கூறப்படுகிறது.