பொதுவாக நமது முன்னோர் எதை செய்தாலும் கட்டாயம் அதற்க்கு ஒரு அறிவியல் காரணம் இருக்கும். ஆனால் நாம் பல நேரங்களில் நாகரீகம் என்ற பெயரில், முதியவர்கள் கூறுவதை எல்லாம் மூட நம்பிக்கை என்று கூறி விடுகிறோம். அப்படி ஒரு பழக்கம் தான், திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது. ஆராய்ச்சிகளின் அடிப்படையில், புருவங்கள் இரண்டும் இணையும் இடமான பொட்டு வைக்கப்படும் இடத்தில், மனித உடல் ஒரு சில மின்காந்த சக்திகளை வெளிப்படுத்துகின்றது. இதனால் அந்த இடத்தை மறைத்து குங்குமம் வைப்பதால், இந்த சக்தி விரயமாவது தடுக்கப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல், குங்குமம் அணிவதன் மூலம் பெண்களின் உடல் சூட்டின் காரணமாக வரும் அனைத்து நோயும் கட்டுப்படுத்தப் படுகின்றது.
மேலும், பெண்களின் புருவங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியில் இருந்து வெளிப்படும் காந்த சக்தியில், ஆண்களை ஈர்க்கும் ஆற்றல் உள்ளது. இதனால் திருமணமான பெண்கள் புருவங்களுக்கு இடையில் குங்குமம் வைத்தால், மற்ற ஆண்களை ஈர்க்கும் ஆற்றல் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் குங்குமம் வைப்பதனால், ஆழ்ந்த சிந்தனையினால் ஏற்படும் தலைவலி, தலை சுற்றல் மற்றும் மயக்கம் ஆகியவை ஏற்படாமல் தடுக்க, புருவத்தில் உள்ள நரம்புகளை தூண்டுவதற்கு குங்குமம் சிறந்த உதவியாக இருக்கும். இது மட்டும் இல்லாமல், சுண்ணாம்பு, படிகாரம் மற்றும் மஞ்சள் ஆகியவை கொண்டு குங்குமம் தயாரிக்கப்படுவதால், குங்குமம் வைப்பவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.