பாரிஸ் ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, பிரபல தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
சோப்ராவின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், காயங்கள் இருந்தபோதிலும் சிரந்த வெற்றியை வழங்கியுள்ளீர்கள், நாங்கள் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று கூறினார். எதிர்காலத்தில் இன்னும் பெரிய வெற்றிகளை குவிக்க வாழ்த்து தெரிவித்தார். சோப்ராவின் குடும்பம் அவருக்கு மிகவும் சிறப்பாக ஆதரவளித்ததற்காக பிரதமர் பாராட்டினார். பாரீஸ் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் வெள்ளியுடன் தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய தடகள தடகள வீரர் என்ற பெருமையை சோப்ரா வியாழன் அன்று பெற்றார்.
Read more ; சைவ பிரியர்களே இதை நோட் பண்ணிக்கோங்க..!! எவ்வளவு நன்மைகள் தெரியுமா..?