fbpx

செம சான்ஸ்… 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற இளைஞர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை…! ஆட்சியர் அறிவிப்பு…!

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் மாதம் போதும் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200., 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக்கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெறலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 ஆண்டு வரை உதவித்தொகை பெற, இதுவரை வங்கிகளில் பதிவு செய்யப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகலுடன், சுயஉறுதிமொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் எந்தவிதமான அரசு உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ளவர்கள் அனைத்து கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அடுத்த மாதம் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Vignesh

Next Post

யாருமே எதிர்பார்க்கல... அரசு அதிகாரிகள் இனி போனில் "ஹலோ" என்று சொல்ல கூடாது...! அரசு வித்தியாசமான உத்தரவு...!

Mon Aug 15 , 2022
அரசு அதிகாரிகள் இனி தங்களது தொலைபேசி தொலைபேசி அழைப்புகளை எடுக்கும் பொழுது ஹலோ’ சொல்ல கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசில் துறைகள் பிரிக்கப்பட்ட நிலையில், ஒரு பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள அரசு அதிகாரிகள் தங்களது தொலைபேசி அழைப்புகளை எடுக்கும்போது இனி ‘ஹலோ’ சொல்ல கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு அம்மாநில அரசின் கலாச்சார விவகார அமைச்சராக பதவியேற்றுள்ள சுதிர் முங்கந்திவார் புதிய அறிவிப்பை வெளியிட்டார். இனி […]

You May Like