fbpx

அதிக பென்ஷன் பெற விருப்பமுள்ளவர்கள் ஜூன் 26 வரை விண்ணப்பிக்கலாம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

EPFO பென்ஷன் தொடர்பான முக்கிய அறிவிப்பை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதிக்கு முன்பு EPFO உறுப்பினர்களாக இருந்து அதிக பென்ஷன் பெறுவதற்கு தற்போது வரை விண்ணப்பிக்காமல் இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக பென்ஷன் பெற இருக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பம் பெற்ற தேதியிலிருந்து அடுத்த 20 நாட்களுக்குள் உடனடியாக செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேசமயம் அதிக பென்ஷன் பெறுவதற்கு மே 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிக பென்ஷன் பெற விருப்பமுள்ளவர்கள் உடனடியாக ஜூன் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் விண்ணப்பித்த 20 நாட்களுக்குள் விண்ணப்பங்களில் ஏதாவது பிழைகள் இருந்தால் அதனை திருத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இருசக்கர வாகனத்தில் 3 பேர் செல்ல அனுமதியா..? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்..!!

Mon Jun 5 , 2023
இருசக்கர வாகனத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் அதாவது ஹெல்மெட் அணிந்த படி 3 பேர் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கேரள எம்.பி,. மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு நிதின் கட்காரி பதில் அளித்துள்ளார். இந்தியாவில் நடுத்தர மக்கள் பெரும்பாலானோரிடம் இருசக்கர வாகனங்களே உள்ளது. அன்றாட வேலைக்கு செல்வது உள்பட தங்களின் பெரும்பாலான பயண தேவைகளுக்கு இருசக்கர வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மோட்டார் வாகன […]

You May Like