fbpx

அயோத்தி ராமரை பார்த்த பின் ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!! இது புதுசா இருக்கே..!!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க தனது மனைவி லதாவுடன் ரஜினிகாந்த் சென்றிருந்தார். விழா முடிந்து திரும்பிய போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், ”இனி ஆண்டும் தோறும் அயோத்தி கோவிலுக்கு வருவேன்” என்று கூறினார்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து முக்கிய பிரமுகர்கள் வருகை தந்தனர். திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த அழைப்பின் பேரில் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்டோர் அயோத்தி ராமர் கோவில் விழாவில் பங்கேற்றனர். கோவிலில் பிராண பிரதிஷ்டைக்குப் பிறகு பகவான் ராமரை தரிசித்தனர். அயோத்தி கோவிலில் தரிசனம் செய்த பிறகு டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த், ”இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்துள்ளது. இனி ஆண்டுதோறும் அயோத்தி ராமர் கோவிலுக்கு வருவேன்” என்றார்.

Chella

Next Post

சிம், நெட் இல்லாமல் வீடியோக்களை பார்க்கலாம்!… நேரடி மொபைல் ஒளிபரப்பு என்றால் என்ன?… அதை எப்படி பயன்படுத்துவது?

Tue Jan 23 , 2024
நாட்டிலுள்ள மொபைல் பயனர்கள் சிம் கார்டு அல்லது இணைய இணைப்பு இல்லாமல் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யும் திறனைப் பெறும் தொழில்நுட்பம் குறித்தும் அதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் இங்கே தெரிந்துகொள்ளலாம். நாட்டிலுள்ள மொபைல் பயனர்கள் சிம் கார்டு அல்லது இணைய இணைப்பு இல்லாமல் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யும் திறனைப் பெறும் தொழில்நுட்பத்தின் சோதனைகளை இந்தியா தொடங்க உள்ளது.செயலில் உள்ள இணைய இணைப்பு தேவையில்லாமல் ஸ்மார்ட்போன்களில் மல்டிமீடியா உள்ளடக்கத்தை செயல்படுத்தும் […]

You May Like