fbpx

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம்..!! குடும்ப அட்டைதாரர்களே டைம் நோட் பண்ணுங்க..!!

தமிழ்நாடு ரேஷன் கடைகளில், அத்தியாவசிய உணவு பொருட்கள் மலிவு விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அந்த கடைகள், சென்னை மற்றும் புறநகரில் காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்படுகின்றன. மற்ற மாவட்டங்களில் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரையும்; பிற்பகல், 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையும் செயல்படுகின்றன.

சென்னை மற்றும் புறநகரில் மதியம் ரேஷன் கடைகளை மூடி மீண்டும் திறப்பதற்கு, 2:30 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது. அந்த சமயத்தில் தான், ரேஷன் கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை, சில ஊழியர்கள் கடைக்கு வெளியே அனுப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூட்டுறவு மற்றும் உணவு துறை உயர் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர். எனவே, ரேஷன் கடைகள் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகவுள்ளது.

Read More : உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா..?நீங்கள் இதை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்..? மறந்துறாதீங்க..!!

English Summary

Officials have decided to reduce the closing time of ration shops in the afternoon.

Chella

Next Post

இனி unread message தொல்லை இருக்காது!… வாட்ஸ்அப் வரவிருக்கும் புதிய அம்சம்!

Thu May 23 , 2024
Whats app: இன்றைய நவீன காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடானது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களை வியக்க வைக்கும் வகையில் புது புது அப்டேட்களை வழங்கிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப்பில் பயனர்களை அதன் Android ஆப்பில் அன்ரீட் மெசேஜை மேனேஜ் செய்வதற்க்கு கூடுதல் கண்ட்ரோல் வழங்குகிறது. […]

You May Like