fbpx

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து ரொக்கமும், தங்கமும், வெள்ளியும் கிடைக்கப் பெற்றது எவ்ளோ தெரியுமா???

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது இதில் ரூபாய் 52 லட்சத்து 07 ஆயிரத்து 983 ரூபாய் ரொக்கமாகவும், தங்கம் 223 கிராம், வெள்ளி 2 கிலோ 780 கிராம் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது.

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில் வைகாசி மாதத்திற்கான உண்டியல் இன்று திறந்து எண்ணப்பட்டது. அதில் பணம் ரூ.52லட்சத்து, 07 ஆயிரத்து 983 ரூபாய், தங்கம் 223கிராம், வெள்ளி 2 கிலோ 780 கிராம் இருந்தது. இதில் திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் சுரேஷ் முன்னிலையில் ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள், ஐய்யப்ப சேவா சங்கத்தினர் மற்றும் கோயில் பணியாளர்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Maha

Next Post

சொத்துக்களை பெற்றுவிட்டு அடித்து துன்புறுத்திய மகன்கள்; தாய் செய்த காரியம் என்ன???

Fri Jun 9 , 2023
மதுரை புதூர் கற்பநகர் பகுதியில் வசித்து வருபவர் அண்ணம்மாள் இவருக்கு குற்றால ராஜா, சரவண பாண்டி என இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர்.ந்த நிலையில் இரண்டாவது மகன் சரவணபாண்டி பெற்றோர்களின் சொத்துக்களான வீடுடன் கூடிய இரண்டு சென்ற இடத்தை பெற்றுக் கொண்டதாகவும். இதனால் மூத்த மகன் குற்றால ராஜா திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் பெற்றோருடைய மீதமுள்ள வீட்டையும் எனக்கு தருமாறு கூறி அம்மா வென்று […]

You May Like